Wednesday, December 28, 2011

வெறியில்லாமல்------ காமம் குறித்து ....!!

காம இச்சை குறித்து ஏதேனும் எழுத வேண்டும் என்கிற கங்கணம் ரொம்ப நாளாக...
மிக இயல்பான, யதார்த்தமான உணர்வது என்ற போதிலும், ஏனோ மற்ற உணர்வுகளோடு ஒப்பிடும் யோக்யதை இல்லாதது போலவும், அநாகரிகம் போலவும் ஓர் மாயையை ஏற்படுத்துகிற விபரீதம் காம உணர்வுக்கு அதிகம் உள்ளது...

மனிதன் பூத்தெழ அதுவே ஆதார ஸ்ருதியான உணர்வு... எல்லா ஜீவராசிகளின் ஆதார ஸ்ருதியும் கூட..
ஒன்றிலிருந்து ஐந்தறிவு வரையிலான ஜீவராசிகளின் புணர்ச்சிகளோ , ஆளிங்கனங்களோ, அருவருப்பாகவோ ஆபாசமாகவோ புரிபடுவதில்லை நமது ஆறறிவுக்கு..!.


 மாறாக அவைகள் கவிதையாக, ரசிக்கிற சுவாரஸ்யத்திலுமாக நம்மைக் குதூகலத்திலும் ஆனந்தத்திலும் கொண்டாடச் செய்கிறது..
மனித காமம் மாத்திரம் மனிதனுக்கே நாலந்தரமாகவும், கீழ்த்தர உணர்வாகவும் புரிபடுகிறது... ஆனால் கண்டிப்பாக அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனும் காமவயப்படுகையில் மிகச் சீராக இயங்குபவனாக, புதுரத்தம் பாய்பவனாக, இதயம் சார்ந்த நோய்கள் குணமடைவதாக அறிவியல் ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன... பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு செக்ஸ் சர்வே எடுத்து அதனை கவர் ஸ்டோரி போட்டு, சர்குலேஷனை அதிகப் படுத்தி வழக்கத்துக்கு மாறாக விற்பனையில் சரித்திரம் படைக்கிற வியாபார உத்தி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..

இப்படியாக மனிதன் காமமே மனிதனுக்கு பெரும்புதிராகவும், மற்றவன் புணர்ச்சியை தரிசிக்கிற ஆர்வம் கொண்டதாகவும் , தன்னால் அவ்விதம் செயல் பட முடியுமா என்கிற கேள்விகளுடனும், முடியும் என்கிற நம்பிக்கையுடனும் , முடியாதென்கிற குற்ற உணர்வுகளுடனும் .... காமம் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தகுதியில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது..

தொடர்ந்து இவை குறித்து எழுதலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்...காமம் கடலை விடப் பெரிது.. கை அடக்கமாக  யாவற்றையும் விளக்கிவிட சாத்யமில்லை... 
அபிப்ராயங்களைப் பின்னூட்டமாக .... பின்னூட்டங்களை அபிப்ராயமாக ...
தெரிவிக்க வேண்டுகிறேன்.. நன்றி..

சுந்தரவடிவேலு..  

2 comments:

  1. நல்ல சப்ஜெக்ட். ஜமாய்ங்க சுந்தர். அப்படியே ஆதாம் காலத்திலிருந்து அனிதா காலம் வரை எழுதுங்கள்.
    //இப்படியாக மனிதன் காமமே மனிதனுக்கு பெரும்புதிராகவும், மற்றவன் புணர்ச்சியை தரிசிக்கிற ஆர்வம் கொண்டதாகவும் , தன்னால் அவ்விதம் செயல் பட முடியுமா என்கிற கேள்விகளுடனும், முடியும் என்கிற நம்பிக்கையுடனும் , முடியாதென்கிற குற்ற உணர்வுகளுடனும் .... காமம் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தகுதியில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது..//

    யதார்த்தமான டச்சிங்.


    //

    ReplyDelete
  2. நிச்சயமாக எழுதுங்க சுந்தரவடிவேலு..

    இதைப்பற்றி பேசினாலே, எழுதினாலே அசிங்கம் என்ற மனப்போக்குதான் இப்போது சமுதாயத்தில் நிலவி வருகிறது.

    வயது வந்த எவரும் காமம் குறித்து இயல்பான உரையாடல் நிகழ்த்தவோ, புரிந்த கொள்ளவோ செய்வதில்லை.,

    ஏன் இது அவசியம் என்பதை இக்கட்டுரைத் தொடர் நிறைவு செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

    தொடருங்கள்..
    வாழ்த்துகள்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...