Wednesday, December 21, 2011

முதல் நாவல்... முதல் விருது..

காவல் கோட்டம் என்கிற தமிழ் நாவல் இந்த வருடத்தின் சாகித்திய அகாடமி பரிசு பெற்றிருக்கிறது... சு.வெங்கடேசன் என்பவரது முதல் நாவல், மற்றும் அவரது ஒரே நாவல் என்பது ஆச்சர்யமும் சந்தோஷமும் நிரம்பிய தகவல்..

முதல் நாவல், அதனையும் 1048 பக்கங்கள் எழுதி இருப்பது பெரிய சாதனை... அந்த சாதனைக்கு மட்டுமே கூட மற்றொரு விருதினை அவருக்கு அறிவிப்பது சாலப் பொருந்தும்... ஆனால் பலருக்கும் போல  வெறும் பக்கங்களை நிரப்புகிற புத்தி மட்டுமே அவருக்கு இல்லை... மிகப் பெரிய வரலாற்றுப் பதிவினை திணிக்க வேண்டும் என்கிற பிரக்ஞை அற்புதமானது..
A file picture of Tamil novelist Su. Venkatesan who won the Sahitya Akademi award, 2011. Photo: G. Moorthy.
அறிமுகமாகும் போதே இரட்டை வேடங்களில் நடிக்கிற அந்தஸ்து பெற்று விட்டதற்கான அதிர்ஷ்டம் போல ... நாவலும் பெரிது, அதற்கு உயரிய விருதான சாஹித்ய அகாடமி யும் கூட..

மற்றொரு ஆச்சர்யம் யாதெனில், இதுநாள் வரை இப்படி எந்த முதல் நாவலுக்கோ, அறிமுக எழுத்தாளர்களுக்கோ சா. அகாடமி விருது வழங்கியதாக வரலாறு இல்லை...
--ஆக, கொடுப்பவர் வாங்குபவர் அனைத்த தரப்பினருக்கும் இது ஓர் புது வகையறா அனுபவம்..

ஏற்கனவே களத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த விருதுக்காக எதிர்பார்த்துக் கிடந்திருக்கலாம்... குளத்தில் நாரை போல... ஆனால் கழுகாய் வந்து திமிங்கலத்தையே கவ்விக் கொண்டு பறந்து விட்டது போல அமைந்து விட்டது சு.வெங்கடேசன் பெற்ற விருது..

இனி, மேற்கொண்டு எழுதுகிற அதீத பொறுப்பு சு.வெ' வுக்கு கூடியிருக்கக் கூடும்... அதனை தக்க வைக்கிற வல்லன்மை அவருக்கு இருக்கவும் கூடும் என்று அனைவரையும் அனுமானிக்க வைக்கிறார்..

பொதுவாகவே எவை குறித்த வரலாறுகளும் இயல்பாகவே சுவாரசியம் ஊடுருவிக் கிடப்பது... அதே சமயம் வரலாறுகள் உண்மை போன்ற பொய்கள் போலவும் , பொய்கள் போன்ற உண்மைகளாகவும் ஒருங்கே தோற்றமளிப்பவை.. . ஆனால் நம்மை சிலிர்க்க வைப்பதில் வரலாறுகள் கிஞ்சிற்றும் குறைந்தவையல்ல...

கூடிய விரைவில் இவரது நாவலை வாசிக்கிற சூழல் உருவாக வேண்டும்..அதன் பிறகு இன்னும் தீர்மானமாக விமரிசிக்க முனைய வேண்டும்... அதற்கான காலம் அருகாமையிலோ தள்ளியோ.. அறியேன்..!!

வி.சுந்தரவடிவேலு.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...