Tuesday, December 6, 2011

கவனக்குறைவுகள்..


...

வானத்தை மூடுகிற
என் பிரயத்தனத்தில்
வீட்டுக் கூரை
ஒழுகுவதை 
கவனிக்கத் தவறி
விட்டேன்....


தெருவில் 
நனையாமல்
குடை பிடித்துக்
கொள்கிற நான்
என் வீட்டினுள்
முழுதுமாக
நனைந்து  விடுகிறேன்..


இப்படித் தான்---
வீட்டினுள் இம்சிக்கிற
எலிக்குப் பொறி
வைக்க மறந்து
வெளியில் இல்லாத
புலிக்கு 
வலை விரிக்கச்
செய்கிறது விதி..!!
!

சுந்தரவடிவேலு                

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...