Saturday, October 22, 2011

நிரந்தரம் என்கிற தற்காலிகம்..

உடலுக்கு நோயென்று ஏதேனும் வருகையில்....
"பற்றற்ற தன்மை" மீதாக ஓர் தனித்துவமான பற்று
வந்து விடுகிறது நமக்கு... இது சற்று வினோதமே..!!

ஆரோக்யமான தருவாய்களில் அல்லாத ஓர் வெறுமையுணர்வு..
பீதி கலவையான ஓர் ஆழ்ந்த அமைதி... நோயில்..!
வாழ்வின் அடர்த்தி நைந்து..,
அறுபடக் காத்திருக்கிற உத்தரவாதமில்லாத
வீணைத்தந்தியின் சாயலில்...

தற்காலிகமான ஆரோக்யமே கூட
நிரந்தரமென்பதான ஓர் மாயத் தோற்றத்தை
நம் எல்லோரின் வசமும் ஏற்படுத்தி விடுகிறது..!!

நிரந்தரமாகி விடுகிற சில நோய்களுமே கூட
தற்காலிகமானது என்பது போல, 
மிகத் துரிதமாக குணமாகி விடுகிற பாவனையிலேயே
மரணம் வரையிலுமாக சமாளித்து வந்து விடுகிறது நம்முடன்..!!!

பணம் சம்பாதிக்கிற ... பொருளீட்டுகிற..
நமது வினய வியாக்யானங்களும் ...
சம்பாதிக்கவே  தடுமாறுகிற நமது பலவீனங்களும்--
மரணத்தின் முன்னிலையில் 
எவ்விதத் தகுதியுமற்றவைகளாகி விடுகின்றன...!!


2 comments:

  1. உண்மை. முற்றிலும் உண்மை.
    ரசித்தேன்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...