Monday, September 26, 2011

ஒவ்வொரு வீதியிலும்...

விதிகளின் நிமித்தமான
பேதங்கள் அபேதங்கள்
யாவுமே --
காரண காரியங்களுக்கு
அப்பாற்பட்டவை...

பேரன் பேத்தி எடுத்த
பக்கத்து வீட்டுத் தாத்தா
இன்னும் தீவிர
புணர்ச்சியில் ஈடுபடுகிற
சங்கேதம் அனைத்தையும்
என் செவிகள் உணரும்...

ஐந்துமாதக் குழந்தை
வயிற்றில் இருக்கையில்
பைக் விபத்தில் சில மாதங்கள்
முன்னர் இறந்து போன
இளவயதுக் கணவன்
எதிர் வீட்டில்...

கள்ளக்காதலைக் 
கண்டும் காணாத
வீரப்புருஷன் ஒரு வீட்டில்..

நல்ல மனைவியை
சந்தேகப்பட்டுக் கொல்லாமல்
கொல்கிற கொடூரன்
இன்னொரு வீட்டில்...

மூன்றாவதும் பெண்ணாகவே
பிறந்ததால் தொட்டில்
குழந்தை அமைப்பிடம்
ஒப்படைக்கிற தீர்மானம்
ஒரு வீட்டில்...

கல்யாணமாகி
வருடம் ஆறாகியும்
புழுப்பூச்சி இல்லை என்று
சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற
தம்பதி ஒரு வீட்டில்....

குதூகலம் கும்மாளம்
ஒரு வீட்டில், 
குடிகாரன் தொந்தரவு
மற்றொரு வீட்டில்...

ஒவ்வொரு வீட்டிலும்
இத்தனை வில்லங்கத்தை
வைத்துக்கொண்டு --
ஒன்றுமே நடக்காத மாதிரி
நாசுக்காய் நீண்டு
கிடக்கிறது வீதி...!!  

2 comments:

  1. //
    மூன்றாவதும் பெண்ணாகவே
    பிறந்ததால் தொட்டில்
    குழந்தை அமைப்பிடம்
    ஒப்படைக்கிற தீர்மானம்
    ஒரு வீட்டில்...//

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. thanks for ur comment raja sir.. also i read yr blog .. it was so good and also i gave a comment there.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...