Monday, September 26, 2011

பலூன்காரனும் குழந்தைகளும்....


விற்பதற்கு முன்னர்
வெடிக்காமலிருக்க 
வேண்டும்!....
விற்றபின் வெடிக்குமானால்
பிரச்னையில்லை...
அடுத்த பலூனுக்கு
உடனடி ஆர்டர் கிடைக்கும்...!!

அவன் தாத்தா பலூன் 
விற்ற காலங்களில்
ஊதி ஊதியே 
சாகவேண்டியாயிற்று...
--அவன் அப்பன்
சோம்பேறி .. 
ஆள் போட்டு 
ஊதவைத்துக்கொண்டிருந்தான்..

நவீன காலம்
அவனை ஊதுவதை 
சுலபமாக்கியிருந்தது..
சைக்கிள் பம்பும்
இன்னபிற காற்றுநிரப்பும்
உபகரணங்களும் 
சந்தையில் சல்லிசாகக் 
கிடைக்கப் பெற்றன...

எல்லா குழந்தைகளும்
அவனது பலூனுக்காக 
அழுதுகொண்டிருக்கையில்
அவனுக்கேனோ 
இன்னும் குழந்தைப்
பேறில்லை...

அவன் மனைவி
அடிக்கடி தூக்கத்தில்
உளறு வாளாம்..
"அந்த மஞ்ச பலூன்
யாரு கேட்டாலும் 
கொடுத்துடாதீங்க.. நம்ம
பாப்பாவுக்கு வேணும்"
அடுத்த ஒரு நாளில்
அதே மாதிரி 
சிகப்பு பலூனுக்கு...

-இதனை எங்களிடம்
சொல்லிக்கொண்டு 
சிரிப்பான்...
அவனது உள் அழுகையை
நான் அறிவேன்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...