Saturday, August 21, 2010

நின்று கொல்லும் தெய்வம்....

கோயிலை விட்டு
வெளியே  வந்த 
பிறகு தான் 
கர்ப்பக்ரஹத்துக்குள்
சுவாமியைப் பார்க்கவே 
மறந்தது ஞாபகம்
வருகிறது....                                      
பிரச்சினைகளுக்கான 
பிரார்த்தனைகளோடு
கோயிலை எல்லாரும் 
அணுகிக்கொண்டிருக்க -
பிரார்த்திப்பதே 
பிரச்சினை என்பதாக
நான் முரண்படுவது 
எந்த லட்சணத்தில் 
சேர்த்தி என்பது புரியவில்லை..

எதிர்வரிசை பெண்களில் 
லயித்து விடுகிறது என் பக்தி..

நாயைக்கண்டால் 
கல்லைக்காணோம்  என்பது
மனிதனின் பிரச்சினை..
--கல்லாயிருக்கிற 
கடவுளுக்கு அது பிரச்சினையே அல்ல...
--ஒரு நாள் 
தன்னையே பெயர்த்து 
'நங்'கென்று என் தலையில் 
ஒரு சிதிலம் 
விழக்கூடுமென்றே அனுமானிக்கிறேன்...!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...