மிகவும் ரகளை
என் மகள்...
குறைந்த பட்சம்
நறுக்கென்று
கிள்ளி விடவோ
'சட்'டென்று
ஒரு அடி வைத்து
விடவோ
தோன்றி விடுகிறது...
முடிந்த வரைக்கும்
அவ்விதம் செய்வதைத்
தவிர்த்து விடுகிறேன்
என்ற போதிலும்,
மனக்குமைச்ச்சலை
வார்த்தைகளில் கொட்டித்
தீர்க்க நேர்கிறது....
அர்த்தம் புரியாத
அந்த வார்த்தைகளுக்காக அல்ல,
-அதட்டலாக அது தொனிக்கிற
ஸ்தாயியில்
மிரண்டு விடுகிறது
அந்தப்பிஞ்சு...
அந்தக்குஞ்சு உதடுகளைக்
குவித்து அழத் துவங்குகிறது...
-அதனையும் அடக்க
ஓர் 'உஷ்' மிரட்டல்,
ஆள்காட்டி விரலைக்காட்டி...
அப்படியே பாலைக்குடித்து விட்டு
கண்ணயர்ந்து விடுகிற
அவளைப்பார்க்க ..
தாங்கவே முடிவதில்லை
ஒவ்வொரு முறையும்..!!
--உடனே
விழிக்க வைத்துக்
கொஞ்சவில்லை என்றால்
உயிரே போவது போலிருக்கும்...
ஆனபோதிலும் அவள்
உறக்கத்தைக்கலைப்பதில்லை...!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
என்னுள் இருக்கும் எண்ணங்களை உங்கள் வரிகளில் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ReplyDeletethanks for your comment mr.jothiji..
ReplyDelete