Tuesday, August 3, 2010

குடிகாரப்பசங்களுக்கு

சிலர்.. அல்லது நிறையப்பேர்கள், மதுவிற்கும் புகைப்பதற்கும் சுலபத்தில் அடிமையாகி விடுகிறார்கள்... படிப்பிலும், நல்ல தொழில் செய்து பொருள் ஈட்டுகிற வல்லன்மையிலும் கெட்டிக்காரர்களாக  இருக்கிற மிகப்பலரும் கூட அந்த இரண்டிற்கும் ஏனோ தன்னை இழந்தவர்களாகி விடுவது சற்று வேதனை அளிப்பதாக உள்ளது...
இந்த பிரபஞ்சத்தில் இருப்பது கொஞ்ச காலம், அதற்குள்ளாக அனைத்த விஷயங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற சித்தாந்தம் வேறு சொல்கிறார்கள்...  
மது, மாது, புகை இதெல்லாம் இல்லாமல் .... அது என்ன வெறுமை வாழ்க்கை.. அப்படி வாழ்ந்து என்ன ஸ்பெஷலாக வாரிக்கட்டிக்கொண்டு போகப்போகிறார்கள் என்கிற நய்யாண்டி வேறு செய்கிறார்கள், நல்லவர்களைப்பார்த்து இந்தக் களேபரத்தில் ஈடுபடுகிற புத்திசாலிகள்....
குடும்பத்தில்  மனைவி பிள்ளைகள் சங்கடப்படுவார்களே என்கிற பிரக்ஞை கூட நாளடைவில் காணாமல் போகும் அளவிற்கு தன் சுய மரியாதை இழக்கிறார்கள்...
இதற்கான காரணங்களை உடன் இருக்கும் நண்பர்கள் என்று சொல்லலாம், அல்லது தனது மன உளைச்சல்களும் இன்ன பிற பிரச்சினைகள் என்று ஏதேனும் ஒன்றை சுலபத்தில் கை காட்டி விடலாம்.. ஆனால் , இப்படியான தன்மைகளால் தன் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிற சூழ்நிலைகளை ஏன் உணர மறுக்கிறார்கள், அல்லது உணர்ந்தும் அது குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள்... வியப்பாயிருக்கிறது...

நான் புகைக்கத்துவங்கி, மற்றும் மது அருந்தத்துவங்கி இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது... ஆனால் அவை யாவும் என் அடிமை தானேயன்றி அவைகளின் அடிமை நான் இல்லை... ஒரு நாளைக்கு ரெண்டொரு சிகரெட்டோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு சிகரெட்டோ தான் நான் புகைக்கிறேன்.. அதே போல மதுவும் ஆடிக்கொரு முறையும் அம்மாவாசைக்கொரு முறையும் சாப்பிடுவேன்... அந்த போதையில் பிறரை காயப்படுத்த முனைவதில்லை... பற்பலரும் மற்றவர்களை காயப்படுத்துவதை குறிக்கோளாக்கி அருந்துகிறார்கள்.. தெளிந்து மன்னிப்புக்கேட்கிறார்கள்.... தேவையா இது?..   
அமிர்தமே என்றாலும் அபரிமிதமானால் ஆபத்து தான்... விஷமே கூட அளவாக மருந்து போல உட்கொண்டு வந்தோமேயானால் அது ஆரோக்கியம்...
-- இதென்னவோ நான் புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து எழுதவில்லை, இப்படி என் போன்ற அனுபவத்தில் உள்ள பலரும் இது போல தங்களது கருத்துக்களில் வெளிக் காண்பித்துள்ளனர்.. . ஆனால் அடிமையாகிக்கிடப்பவர்கள் இதைப்படித்து திருந்துவது என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒன்று நடந்தால் கூட அதிசயம் தான்..
ஆனால் என் போன்ற நல்லவர்கள் {?} இப்படி எல்லாம் பீற்றிக்கொண்டு தான் இருப்போம்... ப்ளோகில் ஏதாவது எழுதி நிரப்ப வேண்டும் அல்லவா??

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...