Monday, February 8, 2010

எழுதுகிறவர்கள் குறித்து...

ஓர் அசந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களில் சுவாரஸ்யங்களும் அறிவுப்பூர்வங்களும் ஒருங்கே இழைந்து என்னை ஓர் அறிவுஜீவி போல எனது கவிதைகளும் கட்டுரைகளும் உணர்த்தி விடுகின்றன... என் உயரிய கருத்துக்களுக்கும் என் செயற்பாடுகளுக்கும் இருக்கிற முரண்கள் எனக்குள் ஒரு இனம் புரியாத குற்ற உணர்வுகளைக்கூட கிளர்ந்திடச்செய்யும்..
இது எல்லா எழுதுகிறவர்களுக்கும் பொருந்துமோ என்னவோ புரியவில்லை.., !!

என் தனிப்பட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் பிறர் வசமும் எதிர்பார்க்கிற இந்த மனோபாவம் ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் என்றே அனுமானிக்கிறேன்... நம் பலவீனங்களை கூட யதார்த்தமாக வெளியிடுகிற நாகரீகம் நமக்கு வேண்டுமேயல்லாது, அதில் ஒப்பீடும் சந்தோஷங்களும் கொள்கிற சிறுமை தவிர்க்கப்படவேண்டிய ஒன்றே...!

நாம் எழுதுவதில் எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனைகளும் பிறர் பாராட்டுக்களும் இருக்க வேண்டுமென்கிற தீராத தாகம் ... அனாவசியமானதென்றே கருதுகிறேன்... நம் போக்கில் யதார்த்தமாக எழுத வேண்டும், அது நேர்மையாக தெளிவாக இருக்க வேண்டும்.. அவ்வளவு தானே அன்றி .. பலரது பாராட்டைப்பெற வேண்டும் .. மிகுந்த கரகோஷம் பெற வேண்டும் என்று கருதுவதெல்லாம் ஓர் பெரும் பின்னடைவை நிகழ்த்தவே ஏதுவாகும் என்று கருதுகிறேன்...

யாதொருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது இயல்பாயும் விபத்தாயும் அமையுமே அல்லாது எதிர்பார்ப்பதோ, அடைய வேண்டும் என்கிற வெறி கொள்வதோ அறிவீனமே ஆகும்..


சுந்தரவடிவேலு ...

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...