Wednesday, September 28, 2016

நீ தரும் --

தொண்டை நனைக்கிற 
தீர்த்தமே.. 
என் தாகத்தை தீர்க்குதே..!

சோளப்பொரி தான் போடுறே..
யானைப் பசி இங்கு தீருதே ..!!

உன் ஒற்றை வியர்வைத் துளியில் 
இங்கு நடக்குது என் குளியல்.. 


நடுப் பகல் பௌர்ணமி குளிர்விக்க
இரவினில் தெரியுது வானவில்..  
இந்தக் காதல் கலவரத்தில்.. !

[சினிமா பாடல் புனைகிற சாதுர்யத்தை இன்னும் நான் புரிந்து கொள்ளவில்லை.. சற்றே பயிலும் பட்சத்தில் பல்லவி சரணத்தை இணைக்கிற சாமர்த்தியத்தை சுலபத்தில் பெறுவேன் என்று நம்புகிறேன்.. 
மேற்கிறுக்கப் பட்ட அந்தப் பாடலானது ..இன்று எனக்குள் முணுமுணுக்கப் பட்டது..  மறந்து விடுவேனோ என்கிற சந்தேக அவசரத்தில் உடனடி நிகழ்வாக பிளாகிலும் முகநூலிலும் பதிந்து விடுகிறேன்..
அர்த்தம் ரசிக்கிற வகையில் உள்ளனவா என்று நீங்கள் அபிப்பிராயம் சொன்னால் உதவிகரமாக இருக்கும்.. ]

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...