Thursday, September 8, 2016

கோபக்காரன் கவிதை..

எனக்குள் கதறி 
சப்தமெழுப்பும் 
என் மௌனங்களும்.. 
எங்கோ சென்று 
அடங்கிக் காணாது 
தொலையும் எனது 
சப்தங்களும் .. 

மௌனங்களையோ 
சப்தங்களையோ 
எதன் பொருட்டும்
தவிர்ப்பதற்கில்லை 
என்பதோடு .. யாவும் 
அதனதன் பயணிப்பில் 
நகர்த்துகின்றன நம்மை.. !

க்ஷணநேர ரௌத்திரத்தில் 
அண்டை அயலாரிடம் 
நாம் பதிந்து வைத்திருந்த 
மேன்மை மென்மை என்ற 
தன்மைகளை -- மிக 
சுலபத்தில் இழக்கிறோம்.. 

 ஒரு கூப்பாடுக்குப் பிற்பாடு 
முந்தைய நாசுக்கை மறுபடி 
புதுப்பிப்பது என்பது  
செத்தாலும் நடவாது.. !
இருப்பினும் மெனக்கெடுகிற 
நம்மைக் கண்டு 
நமட்டாக சிரிக்கிற அவர்களைப் 
பார்க்கையில்... 
மேற்கொண்டு பிஸ்தாவாகவே 
வலம்வரத் தீர்மானம் 
கொண்டுவருவோம்.. !!
Image result for anger modern arts




No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...