எனக்குள் கதறி
சப்தமெழுப்பும்
என் மௌனங்களும்..
எங்கோ சென்று
அடங்கிக் காணாது
தொலையும் எனது
சப்தங்களும் ..
மௌனங்களையோ
சப்தங்களையோ
எதன் பொருட்டும்
தவிர்ப்பதற்கில்லை
என்பதோடு .. யாவும்
அதனதன் பயணிப்பில்
நகர்த்துகின்றன நம்மை.. !
க்ஷணநேர ரௌத்திரத்தில்
அண்டை அயலாரிடம்
நாம் பதிந்து வைத்திருந்த
மேன்மை மென்மை என்ற
தன்மைகளை -- மிக
சுலபத்தில் இழக்கிறோம்..
ஒரு கூப்பாடுக்குப் பிற்பாடு
முந்தைய நாசுக்கை மறுபடி
புதுப்பிப்பது என்பது
செத்தாலும் நடவாது.. !
இருப்பினும் மெனக்கெடுகிற
நம்மைக் கண்டு
நமட்டாக சிரிக்கிற அவர்களைப்
பார்க்கையில்...
மேற்கொண்டு பிஸ்தாவாகவே
வலம்வரத் தீர்மானம்
கொண்டுவருவோம்.. !!

சப்தமெழுப்பும்
என் மௌனங்களும்..
எங்கோ சென்று
அடங்கிக் காணாது
தொலையும் எனது
சப்தங்களும் ..
மௌனங்களையோ
சப்தங்களையோ
எதன் பொருட்டும்
தவிர்ப்பதற்கில்லை
என்பதோடு .. யாவும்
அதனதன் பயணிப்பில்
நகர்த்துகின்றன நம்மை.. !
க்ஷணநேர ரௌத்திரத்தில்
அண்டை அயலாரிடம்
நாம் பதிந்து வைத்திருந்த
மேன்மை மென்மை என்ற
தன்மைகளை -- மிக
சுலபத்தில் இழக்கிறோம்..
ஒரு கூப்பாடுக்குப் பிற்பாடு
முந்தைய நாசுக்கை மறுபடி
புதுப்பிப்பது என்பது
செத்தாலும் நடவாது.. !
இருப்பினும் மெனக்கெடுகிற
நம்மைக் கண்டு
நமட்டாக சிரிக்கிற அவர்களைப்
பார்க்கையில்...
மேற்கொண்டு பிஸ்தாவாகவே
வலம்வரத் தீர்மானம்
கொண்டுவருவோம்.. !!
No comments:
Post a Comment