Tuesday, June 7, 2016

இறைவி ..................[விமரிசன முயற்சி?]..............

நம்முடைய கிஞ்சிற்று அறிவை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை விமரிசிப்பது என்பது சற்றே கடினம்.. மாடு விரட்டுகிற சாட்டையை வைத்துக் கொண்டு சிங்கம் மேய்க்க முயல்வது போன்று..
Image result for iraivi
நமக்கே அஞ்சலியைப் பார்த்ததும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடவேண்டுமே என்கிற ஆவல் பீறிடுகையில், பாபி சிம்ஹா அவ்விதம் அவா கொண்டதில் ஆச்சர்யம் இல்லைதான்.. அஞ்சலியின் தேஜஸ் இந்தப் படத்தில் கனஜோர்..

வி.சேதுபதியோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிற அந்த விடோ கேரக்டர் ரியல்லி மெச்சூர்ட்.. அந்தப் பெண் வெளிப் படுத்துகிற உணர்வுகளாகட்டும் அதற்கான வார்த்தைகளாகட்டும் .. பாலச்சந்தர் வாசம்..

விஜய் சேது தமது சித்தப்பாவோடு பெண்பார்க்க வருகிற போது அவள் நடந்து கொள்கிற விதம், அந்த யதார்த்த வீச்சு . அதுகண்டு மிரள்கிற வி.சேது அவரது சித்தப்பா.. வாவ்.. !
மற்றொரு முறை விஜய் செய்கிற விஜயத்தின் போது, தன்னை ஒரு வேசி போன்று அடையாளப் படுத்தி விட்டு விஜய் அந்த மழையினூடே பைக்கை எடுத்து  செல்கையில், ஜன்னலோரம் நின்று அவள் தேம்பி அழுவது, வெளிப் பொழியும் மழையைக் காட்டிலும் ஈரம் நிரம்பியது.. !

எஸ்.ஜே.சூர்யாவின் ஆல்கஹாலிக் அடிக்ஷனும் அதற்கென அவர் கற்பிக்கிற காரணங்களும் ஒருவித நியாயம் பொதிந்துள்ள போதிலும், இப்படியும் ஸ்க்ரீனே நாறுமளவுக்கு .. எந்நேரம் பார்த்தாலும் தாறுமாறாக குடித்தே தீர்த்திருக்க வேண்டுமா என்ன?
பிறகொரு தருவாயில் திருந்துவதும், இன்னபிற குடிகாரர்களைத் திருத்துவதும் .. நக்கல் கலந்த சுவாரஸ்யம்..
சூர்யாவுக்கு வாக்கப் பட்ட பொண்டாட்டி  வாழ்க்கையும் படா பேஜாரப்பா .. திடீர் திடீர்னு சூழல்களை மாற்றி பாவனைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். நெருப்பாக வெறுப்பை வெளிக் கொணர வேண்டும்.. பிறகு, ஒரே பூரிப்பு மயம் .. அப்புறம் டைவர்ஸ் க்கு அப்ளை செய்வதில் தீவிரம் காண்பிப்பது, பிறகு இளகி, சூர்யாவை ஆலிங்கனம் செய்து முத்தமிடுவது..

இத்தனை குழப்ப சூழல்களையும் அந்தப் பெண் மிக அனாயாசமாக நாசுக்காகக் கையாண்டது  போன்று தான் புலனாகிறது..

விஜய் சேதுபதி  எஸ்.ஜே சூர்யாவுக்காக அந்தப் ப்ரொடியூசரை சாகடிப்பது, .. அதற்காக சிறைக்குப் போவது , கர்ப்பிணி மனைவி அஞ்சலியை நிர்க்கதியாக  நிறுத்திவிட்டு ஜெயிலில் கிடப்பது... 
''என்னால அதப் பார்த்துட்டு சும்மா வர முடியில" என்று மனைவியிடம் சொல்ல, அதற்கு அஞ்சலி. "அப்ப என்னை  மட்டும் இந்த கதியில விட்டுட்டு போறது நல்லா இருக்கா?" என்று கேட்பது... உறைய வைக்கிறது.. 

வெளிவந்து மீண்டும்  சிலை கடத்தலில் பங்குபெற்று கேரள போலீஸால் கைதாவது, தப்பித்து வந்து சேர்வது.. [அந்த சிலை கடத்தல் என்பது தான் என்னவோ ஒட்டாத ஒரு ஒவ்வாமையைத் திணிக்கிறது]

கோமாவில் உள்ள வடிவுக்கரசியிடம் பாபி சிம்ஹா தமது திட்டங்களை சொல்லிய வண்ணமே அவருக்குப் பணிவிடை செய்கையில், வடிவுக்கு கோமா தெளிந்து உடனே நம்மை திகில் செய்ய வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா .. இன்று அப்படியெல்லாம் அற்று யதார்த்தத்தை சிக்கென்று பற்றி இருக்கிறதென்றே சொல்லவேண்டும்.. 

எஸ்.ஜே.சூ வுக்காக தயாரிப்பாளரை கொலை செய்து ஜெயில் செல்வது, பிறகு சூர்யா தம்பி பாபி சிம்ஹாவை [தனது மனைவியை கபளீகரிக்க திட்டமிட்ட காரணத்தால்] கொல்வது .. 
சூர்யா அதுகேட்டு சேதுபதியை வந்து சுட்டுத் தள்ளுவது.. 
பிற்பாடு தமது மனைவியிடத்து மொபைலில்  தாம் மீண்டும் குடிகாரனாகி விட்ட பாசாங்கில் அரற்றி அழுது தீர்ப்பது.. 

வழக்க தமிழ் சினிமாக்களை ஓரம் கட்டிவிட்டு ஒரு மாற்றுப் பாதையில் பயணிக்கிற சம்பவங்கள் படம் நெடுக இழையோடுகிறது தான் என்ற போதிலும், நிறைவு என்பது வெறுமை ததும்புவதை சொல்லாமல் இருக்க முடியாது.. 

சந்தோஷின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, எடிட்டிங், .. அனைத்துமே யதார்த்தப் பிரளயம் நிகழ்த்துகின்றன.. இவைகளை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் .. ஒரு சத்யஜித்ரே ஆவதற்கான அத்தனை தாத்பர்யங்களோடும் மிளிர்கிறார்.. 

அடுத்த படைப்பை எதிர்பார்க்க வைக்கிற கியூரியோசிட்டி கிளப்பி விட்டிருக்கிறார்..                                                                                                                                                            

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...