Thursday, June 16, 2016

மாம்பழமாம் மாம்பழம்..

2 மாம்பழங்கள் 
வாங்கிவந்து.. ஒன்றை 
கீற்றுப் போட்டு 
மூவரும் சுவைத்தோம்.. 
அதன் தேன்சுவை 
நாவில் நர்த்தனம் 
புரியவே... 
பிற்பாடு சாப்பிடலாம் 
என்று மிச்சம் 
வைத்திருந்த அடுத்த 
மாம்பழத்தையும் உடனடி 
கூறு போட ஆயத்தம் செய்கையில் --

முன்னர் அறுக்கப் பட்ட 
அந்தக் கத்தியில் 
நொச நொச வென்ற 
சுவாமிக் கருப்பெறும்புகள் 
புடை சூழ்ந்திருந்தன..

ஆசைதீர அவைகள் 
உண்டு தீர்க்கட்டும் 
பிறகு கழுவி அடுத்த 
மாம்பழம் அரியலாம் 
என்ற எமது முடிவுக்கு 
எங்கள் பாப்பா 
அழத் துவங்கினாள் .. ! !
 Image result for mango eating

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...