Tuesday, June 23, 2015

பெரிய்ய கனவு..

இந்தியாவின் சுகாதார பலவீனத்தை ஒவ்வொரு இந்தியனும் நன்கறிவான் என்ற போதிலும்...
 "இந்தியா முன்னேறுகிறது.. சில வருடங்களில் வல்லரசு ஆகப் போகிறது.. மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதாரத்தில் சுகாதாரத்தில் விஞ்ஞானத்தில் என்ற அனைத்து தகுதிகளிலும் முன்னின்று மற்ற நாடுகள் வாயடைத்துப் போய் .. "

இப்படி அதீதமாகக் கனவுகளைக் காணச் சொல்லி எல்லா இளைஞர்களையும் நன்கு பயிற்றுவித்திருக்கிறார் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம்.. அவர் கனவு காணச் சொன்னது மாத்திரம் பிரம்மாதமாகப் பிரபலம் அடைந்து விட்டது போன்றும் மற்றபடி அந்தக் கனவுக்கு செயல் வடிவம் என்பது இன்னும் கிணற்றுக்குள் போட்ட பாறாங்கல் போன்றே தான் உள்ளது என்பது கூட ஒரு சராசரி இந்தியன் அறிந்து வைத்துள்ள விஷயம் என்பதே யதார்த்தமான நிதர்சன உண்மையாகும்.. 
அமெரிக்கா என்பது, ஜெர்மனி என்பது, ருஷ்யா என்பது, சிங்கப்பூர் என்பது துபாய் என்பது ... அவை போன்றே இந்தியா என்பதும் "அஃறிணை" யே ... 
முன்னர் சொன்ன அனைத்து நாடுகளும் அங்கங்கே வசிக்கிற மக்களால் மாத்திரமே அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.. அவர்களுடைய அயராத முயற்சியே அனைத்துத் துறைகளிலும் செவ்வனே சிறந்து விளங்குகின்றனவே அன்றி, நாடுகள் சுயம்பு போன்று எவ்வித பிரம்மாண்ட வளர்ச்சியும் காணவில்லை என்கிற அடிப்படை , என்கிற சுடும் உண்மை.. ஒவ்வொரு இந்தியனின் மனச் சான்றுக்கும் மவுன சாட்சியாக அவனுள் வியாபித்து குற்ற உணர்வாக திரண்டு கிடக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பே இல்லை .. 

உலகம் தோன்றி இத்தனை ஆயிரம் லட்சம் கோடி யுகங்களுக்குப் பிற்பாடு, பல்முனை அறிவியல் முன்னேற்றங்கள் கண்டான பிறகும் இன்னும் சுகாதார போதனை செய்து கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகுதியில் நமது இந்தியா இருந்து கொண்டிருக்க வேண்டிய வலி தருகிற துரதிர்ஷ்டம் நிச்சயம் அனேக நாடுகளுக்கு இல்லை என்பதே உண்மை. 

நமக்கும் கீழே ஆயிரம் பேர் என்கிற 'சொத்தை' ஆறுதல் வார்த்தைகள் அநியாயமானவை.. 
எங்காவது எதற்காவது கியூவில் நின்று கொண்டிருக்கையில் வேண்டுமானால் பொருந்திப் போகும் அந்தப் பிரயோகம்.. 
ஆனால், ஒரு நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பீடு செய்யப் படுகையில் , நமது இந்தியா அப்படிப் பின்தங்கிக் கிடப்பது  தாங்கொணா வெட்கம் வேதனை அளிக்கிறது ...  

 இந்தியா மீதான இந்தப் பார்வை என்னவோ ஒப்புக்கு சப்பாணி போன்று அல்லாமல், இதனை மாற்றி அமைக்கிற திராணி நம் ஒவ்வொரு நபரிடமும் ஒன்றோ ரெண்டோ சதவிகிதங்களாவது பிறக்கும் பட்சத்தில் நமது தேசம் மாறுகிற வாய்ப்பு உண்டு.. அல்லது இந்த மாதிரியான வெற்றுக் கட்டுரைகளும், வெற்று ஆதங்கங்களும் மாத்திரமே சாத்தியம்.. 

ஏதோ இந்தப் புதிய ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான சுகாதாரத்தை ஊக்குவிக்கிற வேலையைத் துவங்கியுள்ளது.. அதிலும் ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டம் மங்கிப் போய்  ஓர் சுணக்கம் நிகழ்வதாகப் புரிகிறது. 

இந்தியா ஒளிர்கிறது .. என்பது , ஒரு சினிமா அரங்கு A /C என்று விளம்பரப் படுத்தி விட்டு மின்விசிறியைக் கூட ஓடவிடாமல் எல்லாரையும்  உப்புசத்தில் சீரழிப்பது போன்றதாகும்.. 
எவ்வித அறிவிப்புக்களும் இன்றி, வியர்த்து ஒழுகி , கொஞ்சம் காற்று வீசினால் தேவலாம் என்றிருக்கிற  ஒரு நபருக்கு "சும்மா.. ச்சில் .." என்று ஏ .ஸி அந்த அரங்கினுள் பரவி இருந்தால் எப்படி இன்பமாக இருக்கும்?.. 

அப்படி ஒரு அறிவிப்பில்லாத ஆனந்தம் படரவும் தொடரவும் வேண்டும் என்பதே எனது சிறு கனவு.. அல்லது பெரிய்ய கனவு.. 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...