Friday, June 12, 2015

நடுவில்..

டலின் நடுவே 
தணியாத தாகத்தோடு.. 

கடவுள்களின் நடுவே 
நிறைவேறா பிரார்த்தனையோடு... 

வெற்றியாளர்களின் நடுவே 
தழுவிய தோல்வியோடு.. 

கடுந்துயர்களின் நடுவே 
சற்றே மகிழ்வோடு.. 

வாழ்க்கையின் நடுவே 
மரண பயங்களோடு .. !!
         
"திருப்பூரின் நடுவே ... 
இன்னும் வேலை தேடிக் கொண்டு" 
என்கிற ஒரு விஷயம் மனசில் தோன்றவே, மேற்கண்ட சில முரண்களும் இங்கே கவிதையாக முயல்கின்றன.. !

1 comment:

  1. திருப்பூர் அப்படித்தான் ஆக்கிக் கொண்டிருக்கிறது...!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...