Tuesday, March 24, 2015

எனது பிணம் குறித்த கவலை..

ரணித்துக் கிடத்தப் 
பட்டிருக்கையில் 
எனது அவயவங்கள் 
கவனிக்கப் படக் கூடுமோ 
என்கிற அனாவசிய வெட்கம் 
இப்போதைய என் உயிரில்...!

எனது  ஆன்மா 
தேர்ந்தெடுத்துள்ள உடல் 
எனது குற்ற உணர்வுகளின் 
ஊற்றாய் விளங்குவதை 
சொல்லியாக வேண்டும்.. 

இருக்கிற உயிரின் 
நிமித்தம் அவைகளை 
எதையேனும் போட்டு 
மூடி மறைக்கிற 
உத்திகளைக் கையாண்டு 
வெற்றிபெறத் தெரிந்து
வைத்திருக்கிறேன்.. 

என்ற போதிலும் --

பிரக்ஞை உதிர்ந்து 
நாறத் துவங்குகிற இந்த 
உடல் குறித்தான 
என்னுடைய இப்போதைய 
அனாவசிய வலிகளும் 
வெட்கங்களும் 
நகைக்க உகந்தவை 
போன்றே தோன்றுகிறது.. 

சற்றேனும் எனதுடல் 
மிளிர்கிறது எனில் 
மணக்கிறது எனில், 
அது இந்த அறுந்து போகக் 
காத்திருக்கிற உயிரின் 
கைங்கர்யமே அன்றி 
வேறென்ன? 

இடம் ஏவல் புரிபடாமல் 
மூக்குச் சளி சிந்தி 
எனக்கென மனமொன்றிக் 
கதற சிலர் இருப்பர் .. 
பிரச்சினை அவர்களல்ல.. 

மேற்கொண்டு இந்தப் 
பிரபஞ்சத்தில் எனது 
சுவடுகள் எவையும் இல்லை....

சாம்பலென சற்று நாழிகையில் 
பொசுங்கப் போகிற உடல் 
நிறைவு முறையாக  சிலரால் 
அலசப் பெறுமன்றோ ?

அவர்களுக்கென 
என் பிணம் சற்றே 
பொலிவுற்றால் தேவலாம் 
என்கிற எனது இப்போதைய 
கவலை மறுபடி எனக்கு 
சிரிப்பை முட்டவே  வைக்கிறது.. !!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...