Tuesday, August 12, 2014

கறிப்பசி...

எந்தக் கருப்பராயனும் 
கட்டளையிடவில்லை 
ஆட்டுக் கிடாயை 
வெட்டச் சொல்லி.. 

உன் குவார்ட்டர் 
அடித்த வாயும் வயிறும் 
தான் கேட்கிறது.. 

மழுங்கிய அரிவாளை 
கருப்பன் கைகளில் 
செருகி விட்டு .. 
ஆட்டுத் தலை வெட்ட 
உன் அரிவாள் 
சாணை பிடிக்கப் படுகிறது.. 

தண்ணியை முகத்தில் 
அடித்தும் கூட சிலிர்க்காத 
ஆடு கண்டு என் அப்பத்தா 
கதறுகிறாள்.. 
"ஐயோ .. சாமி குத்தம் 
ஏதோ நடந்துடிச்சோ?"
என்று சொல்லி.. 

பிற்பாடு சிலிர்த்து 
ஆடு வெட்டப் படுகையில் 
அவளது பூரிப்பும் 
புன்னகையும் ... 
அவள் தலை எடுக்க 
வேண்டும் போல 
ரௌத்ரம் எனக்கு.. !!

"கருமாந்திரம் புடிச்ச 
சரக்கு போல இருக்கு.. 
மப்பே சரியா ஏறலை.. "
என்று எலும்பை 
உறிஞ்சி ஈரலைச் 
சுவைக்கிறான் 
கோவில் பூசாரி.. ! 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...