Monday, August 4, 2014

சக்கரம்..

என்னுடைய 
பல நண்பர்களின் 
மரணம் 
இந்த வாழ்வின் நிலையாமை 
குறித்து எனக்கு 
உணர்த்தி இருக்கின்றன.. 

ஒரு வார கால 
அவகாசத்தில் அவ்வித 
உணர்வுகள் விடைபெற்று 
மறுபடி படிந்து விடுகிறது 
வாழ்க்கை.. 

இருக்கிற வரைக்குமான 
நிரந்தரத் தன்மையில் 
இந்த வாழ்க்கை மட்டுமே 
புரிபடுவதால் 
நாம் உணரும் சாத்தியமற்ற 
மரணத்தின் மீதான 
மதிப்பும் பயமும் 
தாற்காலிகமாகி விடுவது 
எல்லாருக்குமான 
யதார்த்தம் என்பதே 
யதார்த்த உண்மை.. !!

சாசுவதமான மரணம் 
சுவாரசியப் படுவதில்லை.. 
மாறாக சாஸ்வதமற்ற 
வாழ்க்கையே அதீத 
சுவாரஸ்யம்....!

மரணங்களை 
மனிதர்கள் வெறுத்தால் 
என்ன ..?!
வரவேற்க மறுத்தால் 
தான் என்ன??

மனிதர்களை 
அரவணைக்கவும் 
ஆதரவளிக்கவும் 
நிரந்தரப் புகலிடம் 
கொடுக்கவும் 
மரணங்கள் எப்போதும் 
தயார் நிலையிலேயே 
உள்ளன.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...