Saturday, January 5, 2013

அந்த அப்பாவி டில்லிப் பெண்

அந்த அப்பாவி டில்லிப் பெண் சம்பவம் கல்வெட்டை விட ஆழப் பதிந்து விட்டன எல்லாரது மனங்களிலும்...
நிச்சயம் அந்த சம்பவம் நிகழ்ந்த அந்தக் கொடூர ஷணங்கள் எல்லாரது மனங்களிலும் ஓர் தவிர்க்க முடியாத கற்பனையாக ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டுதான் இருக்கும்..
தனது இனமெனில், நான்கறிவு ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூட ஓர் இரக்கத்தைக் காண்பிக்கிற இவ்வுலகில் ஆறறிவு படைத்த மனித இனம் எப்படி இப்படி ஓர் கேவல செயலைச் செய்தது?

அங்கே இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரஜையும் ஈவிரக்கமற்ற மனோபாவம் கொண்டவர்கள்... பிணத்துடன் கூட உறவு வைக்கத் தயங்காத ஈன ஜென்மங்கள்... பீயைத் தின்று கூட ஏப்பம் விடுகிற பனாதிப் பரதேசிப் பயல்கள்..

%20%28A%20picture%20tribute%20to%20the%20dead%20Delhi%20woman%2C%20who%20was%20repeatedly%20raped%20on%20a%20moving%20bus%20on%20December%2016%20has%20gone%20viral%20on%20Facebook.%29
அதில் ஒரு பயல் பதின் வயதில் உள்ளதாகவும் அவனுக்கு தண்டனை சற்றே மாற்றி அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசித்து நேரத்தை அனாவசியமாக விரயம் செய்து வருகிறார்கள்.. 

எவ்வித பாரபட்சங்களும் அற்று இவர்கள் அனைவரும் மிகக் கொடூர முறையில் சாகடிக்கப் படவேண்டும் என்பது எல்லாரது ஒருமித்த கருத்தும் ஆகும்..

கொசுவை நசுக்க "ஜீவகாருண்யம்" பேசுகிற ஓர் சாது கூட , இந்த கற்பழிப்பு கும்பலை சுண்ணாம்புக் கால்வாயில் தூக்கிப் போட்டுக் கொல்ல வேண்டும் என்று ஓர் அனுமானத்தை வைத்திருக்கக் கூடும்..!!

இவர்களுக்கு வக்காலத்து வாங்க வக்கீல் எவனாவது முளைத்தால், அவனது பொண்டாட்டியே அவனுக்கு விஷம் வைத்துவிடுவாள்...


இவர்களுக்கு நரகத்தை நாம் இங்கேயே காட்டிவிடவேண்டும்... இவர்களுக்கு அளிக்கப் படுகிற உயர்ந்த பட்ச தண்டனை, மேற்கொண்டு இவ்வித நடவடிக்கையில் ஈடுபட நினைக்கிற எவனொருவனுக்கும் பெரிய பாடமாக அமையவேண்டும்.. 


நோகாமல் இவர்களை தூக்கிலேற்றி சாகடிப்பதோ, வேறு ஏதாவது மனித நேய அடிப்படையில் ஓர்  இயக்கம் போராடத் துணிவதோ இவர்களது விஷயத்தில் கவைக்கு உதவாது.. 


பொதுமக்களால், அதுவும் கல்லூரிப் பெண்களால் கல்லால் அடித்துக் கொல்லப்  படவேண்டும்... அந்த ஐந்தாறு களவாணிப் பயலகளையும் சேர்த்துக் கொல்லக் கூடாது.. ஒவ்வொருவனாக... அடுத்தது நாம் என்கிற பயத்தில் உறைந்து போய்  நிற்க, ஒவ்வொருவனும் துடித்து துடித்து சாவதை எல்லாருமே  பார்க்கக் காத்திருக்கிறோம்... 


ரோட்டில் செத்துக் கிடக்கிற எலியைப் பார்க்கக் கூட அருவருத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிற  சுபாவத்திலுள்ள நான்.., இவனுகளை கல்லில் அடித்து சாகடிக்கிற வாய்ப்பை அளித்தால் ஏற்றுக் கொள்கிற மனோதிடத்தில் ஓர் வெறியோடு  இருக்கிறேன்... ஒவ்வொருவரும் இருக்கிறோம்...!


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...