Monday, January 14, 2013

விகடனுக்கு எழுதி அனுப்பிய கவிதை.. அனுப்பிய நாளிலிருந்து ரெண்டு மாதங்கள் வரைக்கும் வருகிற விகடன் இதழ்களில் பிரசுரமாகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள், விகடன் குழுவினர்... அப்படி பிரசுரமாகவில்லை எனில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்று அர்த்தப் படுத்திக் கொள்ளச் சொன்னார்கள்.... அந்த ரெண்டு மாதங்கள் நான் விகடனை கவனிக்கவில்லை, அதில் எனது கவிதை இடம் பெற்றுள்ளதா என்பதையும் நான் கவனிக்கவில்லை..
அதனால் என்ன, விகடன் தவிர்த்துவிட்டால் தவிர்த்துவிட்டுப் போகட்டும், அதான் என்னோட ப்ளாக் இருக்கே... இங்கே என்னோட கோடானு கோடி ரசிகர்கள் குவிஞ்சு கெடக்கறாங்களே .. இனி கமெண்ட்ஸ் மேல கமெண்ட்ஸ் கொட்டித் தீர்ப்பாங்களே...!!

தவிர்க்க முடியாதது 



கண்ணீர் அஞ்சலிப்
போஸ்டரில்
இடம்பெற்ற முகம்
நமக்கு 
அறிமுகமில்லாத 
முகமென்றால்,
-அனாவசியமான 
வெறுமை ஒன்று 
மனசை 
ஆக்கிரமிப்பதை 
ஏனோ தவிர்க்கவே 
முடிவதில்லை..!!


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...