Thursday, December 6, 2012

ஐந்து நக்ஷத்திர குடிசைகள்...

ங்கக் குப்பையில் 
நானெனது 
கந்தலைத் தொலைத்து 
விட்டேன்...
அம்மணத்தோடு 
அலைகிறேன்..!               

அறுக்கும் வைரங்கள் 
காலடியில்..
அதற்கு பயந்து 
லாரி டயரில் தைத்த 
செருப்பு..
அவ்வப்போது 
அலட்டிக் கொள்கிற 
ராத்திரிக் குளிர்...
குளிர் காய 
நெருப்பில் போட
கரன்சி சேமித்து 
வைத்துள்ளேன் 
ஏராளம்....

பிளாட்டினத் 
தட்டேந்தி 
அன்றாடம் பிச்சை..
-அமிர்தம் 
விழுந்தால் 
நாய்க்கு எறிவேன்..
பழைய சோறென்றால் 
பருக்கை 
விடமாட்டேன்..!!

3 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...