Monday, December 10, 2012

தவிர...

வாழ்க்கையைத் தவிர
யாவற்றுக்கும்
உத்திரவாதமிருக்கிறது...
--ஆனால்
வாழ்க்கை
பெரிய உத்திரவாதம் போல
மற்றவற்றின்
உத்திரவாதங்களுக்காக
நாமெல்லாம்
அதீதம் மெனக்கெடுகிறோம்..!

தாற்காலிகமான
முகவரிகளில் நாம்
வசித்து வருகிறோம்...
ஆனால்
விண்ணப்ப படிவங்களில்
"நிரந்தர முகவரி"
என்கிற கட்டத்தில்
எதையோ பூர்த்தி
செய்துகொண்டிருக்கிறோம்...

யாரோ சொல்லி

உலகம் உருண்டை
என்று புரிந்துகொண்டுள்ளோம்..
யாரோ சொல்லி
இந்த பூமி
நவகோள்களில் ஒன்றென்று
அறிந்து வைத்திருக்கிறோம்..!

நாமென்ன சொல்கிறோம்?..
அவனம்பிக்கைகளைத் தவிர..!!

நாமென்ன செய்கிறோம் ?..
சும்மா இருப்பதைத் தவிர..!!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...