Sunday, December 30, 2012

அமெரிக்க நண்பனுக்கு ஓர் கடிதம்..


அன்பு செந்தில்.... சாம்..
வடிவேல் நான். நலம், நலமறிய அவா.    

செல்போனில் என்னோடு நீ உரையாடிய அந்நாளிலேயே , "பொன்னான உமது நேரத்தை என்னோடு உரையாட செலவிட்ட" மைக்காக நன்றி நவிலலாம் என்றிருந்தவன் ஏனோ தாமதப் பட்டுவிட்டேன்.. 

காலச்சுழலில் யாவரும் புலம்பெயர்வதே யதார்த்த நிகழ்வாக உள்ளது இந்தப் பிரபஞ்சமெங்கிலும் ..!. ஓர் பிரத்யேக பதின் வயதுகளில் யாவருமாக கூடிக் குழுமி .. பிரிவதற்கான வாய்ப்பே அசாத்தியம் போல ஓர் மாயை பின்னிப் பிணைவதும் பற்றிப் படர்வதும்.. பிற்பாடு ஓரிழையில் இவனெங்கோ அவனெங்கோ என்கிற விதமாக கடல் அலை போல காலம் இழுத்துக் கொண்டு போய் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தளத்தில் நிலை பெறச் செய்கிற இந்த வாழ்வின் மர்மம் சுவாரஸ்யம் நிரம்பியது.. இல்லையா செந்தில்??

என்போன்ற சிலரை எந்த அலையும் இழுக்கவியலாத ஓர் பாறைத்தன்மையில் படிந்து நிற்கவும் வைத்துவிடுகிறது..." இந்த சொந்த மண்ணை, இந்த இன்ப இந்தியாவை விட்டு எந்த சக்தியும் அடித்து சென்று விடமுடியாது " என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளமுடிகிறது..  "இத விட்டா நமக்கு வேற கதி இல்லை" என்று மாரடித்துக் கொள்ளவும் முடிகிறது..

என்னவோ இதையெல்லாம் இந்த ஷணத்தில் உமக்குச் சொல்லத் தோன்றிய மாத்திரத்தில் சொல்கிறேனே தவிர முந்தைய அனுமானங்கள்   எதுவும் இல்லை..

நண்பர்களை விட்டு சிலர் உன்போல தேசம் கடந்து விடுகின்றனர்... அங்கிருந்து உமது மகள் பல மைல் தூரங்கள் தள்ளிப் போய் படிக்கவேண்டிய சூழல்..

ஏனோ புலம்பெயர்தல்கள் என்பன வரமா சாபமா என்கிற தகுதிகளோடு ஒத்துப் போகாமல் ஓர் குழப்பமான தகுதியோடு நம் வாழ்வோடு ஊடாடிக் கொண்டு தானிருக்கிறது எப்போதும்..

மறுபடி நீ இந்தியா வருகிற காலம் இன்னும் சற்று நீண்டிருப்பதாக சொன்னாய்... ஏனோ, எனக்கது இன்னும் விலகிப் போனதான ஓர் கற்பனை.. 

நன்றி செந்தில்.. 

ப்ரிய 
வடிவேல்.. சுந்தர..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...