Friday, October 5, 2012

கொடிகள் கிழிவதில்லை ....

Indian Stock Market Shares
Indian Stock Market Shares


Indian Stock Market SharesIndian Stock Market Shares
Indian Stock Market Shares
மற்ற நாடுகளோடு நமது இந்தியாவை அவ்வப்போது ஒப்பீடு செய்து ஓர் மௌனமான குற்ற உணர்வில் மனதை நனைய விடுகிற அனுபவம் இந்த தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்தான ஓர் அனுபவமென்றே கருதுகிறேன்...
Indian Stock Market Shares
ஆனாலும் இந்த மூவர்ணக் கொடி கண்டு மனசுள் எழுகிற பரவச உணர்வை எந்த இந்தியனாலும் புறக்கணிக்க முடியாது...

உலகத்தில் உள்ள அனைத்த நாடுகளின் கொடிகளும் அந்தந்த நாட்டு மக்களின் மனதுள் ஓர் மிகப் பெரும் ஆளுமை செய்த வண்ணம் பறந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
Indian Stock Market Shares
நாம் இங்கே நமக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்வதில் தான் ஓர் உன்னதம் பொதிந்துள்ளதாக உணர்கிறோம்..

ரத்தம் ஒரே நிறம், எல்லா மக்களும் ஒரே இனம், நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள், என்றெல்லாம் வீராவேசத்தோடு பல முழக்கங்களை கிளப்பினாலும், காற்றிலே பறக்கிற கொடியைக் கூட வேறுபடுத்தி அடையாளம் காண்பிப்பதில் தான் .. பேதங்களின் மீதாக மனிதனுக்குள்ள இயல்பான ரகசியமான காதல்  பகிரங்கப்படுகிறது..

வானம் மாதிரி ஒரே அடையாளம் எவருக்கும் சுவாரஸ்யப் படுவதில்லை... பிறை மாதிரி, பௌர்ணமி மாதிரி, உதயசூரியன் மாதிரி, அஸ்தமன சூரியன் மாதிரி, நட்சத்திரங்கள் மாதிரி, முகில்கள் மாதிரி,வானவில் மாதிரி...இப்படி பல வகையறா அடையாளங்களை அலசுவது தான் அவனது ரசனைக்கான பெருந்தீனி... இதனையெல்லாம் விடுத்து ஓர் சாவகாச தருணத்தில் வானத்தை மட்டுமே ஏகாந்தமாக ரசிக்கிற பாங்கும் மனிதன் வசம் உண்டு..! அந்த ஓர் தன்மையின் போதில் தான் அவனது பிரக்ஞை சமத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறது... பிறகு அவனையும் அறியாமல் பாகுபடுத்துகிற பந்தாட்டம் அவனுள் புகுந்து அதற்குமிதற்குமாக விளையாடத் தூண்டுகிறது.

இவன் கத்திக் கதறித் தான் இனி இந்தியாவே வாழப் போவது போல.. , "இந்தியா வாழ்க".. "வாழிய பாரதம்".. "வாழ்க இந்தியா.. வளர்க அதன் புகழ்" என்றெல்லாம் அரற்றித் தீர்ப்பதில் அவனது தேசபக்தி பூர்த்தியாகிறது அவனுள்...
-பிடித்த கொடியை விடாமல் இருப்பதும், கொடியைக் காப்பதும்,.. கொடிகாத்த குமரன் போல கொடிநாட்ட முயல்வதும்...

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் கொடிகளைத் தவிர எல்லாமே கிழிந்து விடுகின்றன... ஆனால் கிழிந்துவிடுகிற பலவீனத்தில் இருப்பது போல தெரிவதென்னவோ கொடிகள் மாத்திரமே..!!













2 comments:

  1. வித்தியாசமான (உண்மை) சிந்தனைகள் சார்...

    ReplyDelete
  2. thank u dear danpal sir.. and how r u ?

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...