Tuesday, September 4, 2012

மானங்கெட்ட காதலன்..

உன் முகவரி
தெரியாதெனிலும்
உனக்குக் கடிதம்
எழுதாமலிருக்க
எனக்கு முடியவில்லை...

அன்றைய நாட்களில்
உன் முகவரி
தெரிந்து நானே
உமது இருப்பிடம்
வந்துபோவதுண்டு...

ஓர் தருணமதில்
என்ன காரணமோ
தகவல் தெரிவிக்காமல்
நீ பெயர்ந்து விட்டாய்
ஓர் எதிர்பாரா இரவில்...

உன் அப்பாவின்
கடன்சுமை என்று
காரணம் சொல்லினர்
அருகிலிருந்தோர்..

ஒரு வார்த்தை
என்னிடம் சொல்லி
இருந்திருக்கலாம்..

நானும்
வந்திருப்பேன்..
உங்களோடே .,
உன்னோடே ...!!


2 comments:

  1. நல்ல வரிகள் சார் ... நன்றி...

    ReplyDelete
  2. (label) இப்ப தான் பார்த்தேன்... அற்ப கவிதை...? அற்புத கவிதை...

    இதனால் (Superiority Complex) வந்து விடாது... வாழ்த்துக்கள்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...