Friday, September 21, 2012

ஏதோ சொல்ல வருகிறேன்..

எல்லாம் மாயை என்கிற சித்தாந்தம் இந்த வாழ்வு குறித்த ஓர் வகையான வெறுமையான அபிப்ராயமேயன்றி, அவ்வித சித்தாந்தம் அப்படி ஒன்றும் ஆரோக்கியமான தன்மையாகத் தெரியவில்லை...

எவ்வளவோ அரிய பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இவ்விதமாக எதிர்மறையாக இந்த வாழ்வினை அனுசரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடைய சாதனை நிச்சயம் சாத்தியப் பட்டிருக்காது.. 

சாதிக்க வேண்டுமென்கிற அக்கறை அற்றவர்களும் சாதிப்பதை தனது பிரக்ஞையுள் கொணர்ந்திராதவர்களுமே இவ்வித அற்ப முடிவினை உடனடியாக எடுத்து கவிதையும் கதையும் புனைந்து கொண்டிருப்பர்....

நமது பிரபஞ்சம் நவகோள்களுள் ஒன்றென்பதையும், மற்ற எட்டுக் கோள்களும் மனிதர்கள் வசிக்கும் லாயக்கற்றவை என்பதையும் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் மூளை எம்மாத்திரம், தண்ணி அடித்துவிட்டு தனது வீடே மறந்து போய் மல்லாந்து கிடக்கிற அற்ப மனித மூளை எம்மாத்திரம்?..

       
மூளையின் வடிவமும் அதன் இயக்கங்களும் வேண்டுமானால் மாறுபாடற்று இருக்கலாம்... ஆனால் அதன் சிந்திக்கிற ஆற்றலும் திறனும் அதற்குரிய ரசாயனங்களும் வெவ்வேறு வகையறாவில் வியாபித்துள்ளன..

பிரக்ஞை தொலைந்து மல்லாந்து மாயை என்று உளறுபவன் உளறலை ஏற்பது நமது   கேனத்தனம் ...
விண்வெளியில் அன்றாடம் நிகழ்கிற பற்பல அற்புதங்களை செய்தியாகப் படிப்பதற்கும் கேட்பதற்கும் கூட ஓர் மனநிலையற்று எருமைமாடு  கணக்காக நம்மையும் அறியாமல்  நாமெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சன  உண்மை..

1 comment:

  1. என்ன சார்... இப்படி உண்மை போட்டு உடைச்சிட்டீங்க...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...