Wednesday, September 12, 2012

நான் எழுதாத இரண்டு நல்ல கவிதைகள்..

ஒரு சிறு அழகிய கவிதை..


மழையில் நனைந்த போது --
 பார்ப்பவர்கள் 
என்னைத் திட்டினர்...

என் தலையைத் 
துவட்டியபடி 
மழையைத் திட்டினாள் 
என் அம்மா..

மற்றுமொரு கவிதை....  தனக்குச் 
                                                   சோறூட்ட வருகிற 
                                                    பிஞ்சு விரல்களை 
                                                     ரசித்துக் கொண்டே 
                                                      உண்ண மறக்கின்றன 
                                                       பிளாஸ்டிக் பொம்மைகள்.

இந்தவாரக் குங்குமம் இதழில் மேற்கண்ட இரண்டு கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.. மிகவும் ரசித்தேன்.

வழக்கமாக நான் விகடன் தவிர எந்த வார இதழ்களும் வாசிப்பதில்லை.. விகடனைக் கூட மிக அரிதாக, கைக்குக் கிடைக்கிற பட்சத்தில் மட்டுமே ..
அதிலும் நான் எந்தக் கவிதைகளையும் தேடித் பிடித்து படிப்பவனல்ல..
அதையும் தாண்டி இவை என் கண்ணில் பட்டு என்னை மிக ரசிக்க வைத்தன . இனி, மற்ற பத்திரிகைகளையும் படிக்க வேண்டும், மற்ற கவிதைகளையும் தேடித் பிடித்து படிக்கவேண்டும் என்ற ஆசைகளைத் தூண்டிவிட்டன, குங்கமும் அதன் இரண்டு சிறு கவிதைகளும்...

ஆனால் நான் சோம்பேறி .. அப்படி எல்லாம் படிப்பேன் என்று எனக்கே நம்பிக்கை இல்லை .. பார்ப்போம்.




























1 comment:

  1. அருமை...

    குங்குமம் இதழில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...