Monday, September 10, 2012

புதிய பார்வை..



இந்தப் புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
நிச்சயம் ஓர்
சந்தோஷமான கவிதை
வரப்போவதில்லை...

ஆனால் இந்தப்
புகைப்படத்திலுள்ள
குழந்தைகளுக்குப்
போல சந்தோஷம்
வேறாருக்கும்
இருக்கப் போவதுமில்லை...

இந்தப் புகைப்
படத்திற்கு முந்தைய
இதற்குப் பிந்தைய...
இவர்களது அவகாசங்கள்
யாவும் சத்தியமாக
ஆனந்தக் குறைபாடற்றுத்
தான் இருந்திருக்கக் கூடும்...

ஆனால்
கவிதை எழுதுகிற நாம்
இவர்கள் சேற்றில்
விழுந்துவிட்டதாகப்
புனைகிறோம்...
இவர்கள் கவலைப்
படுவதாக
கவிதையை நடிக்க
வைக்கிறோம்...

இவர்களுக்கு அறிவு வந்து
வாழ்நாளில் இவர்கள்
அறிகிற கவலை
என்பது ... நாமெல்லாம்
அனுபவிக்கிற
பெருங்கவலைகளின்
சிறு துகள்களே அன்றி
வேறொன்றுமல்ல...

என்ன.. நாமெல்லாம்
காருக்குள் அழுதுகொண்டு
போய்க் கொண்டிருப்போம்..
இவர்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
தேரிழுப்பவர்கள்....!!
--------*************--------

2 comments:

  1. ஒவ்வொரு வரியும் உண்மையை சொல்கின்றன...

    ReplyDelete
  2. thank you boss..
    and how your business going on?

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...