Monday, April 23, 2012

பொய் மகுடங்கள்...

தலையில் நடப்பதாக 
எனது ஆணவத்திற்கு 
குறியீடு வைத்திருந்தார்கள்...

-எனக்கு 
சிரசாசனமே சரியாக
வரவில்லை என்று
எனது யோகா வாத்தியார்
குறை சொல்கிறார்..

வள்ளல் தன்மை
என் கூடப் பிறந்ததாக
என் ஜாதகம் பேசுகிறது..

-என் பேரம் கருதி,
நான் கூப்பிட்டால் கூட
வருவதில்லை
என் வீதி கடக்கிற
கீரைக்காரி..!

சுந்தரவடிவேலு..

2 comments:

  1. கவிதையில் ஹாஸ்யம்!
    அருமையான கவிதை.
    //எனக்கு
    சிரசாசனமே சரியாக
    வரவில்லை என்று
    எனது யோகா வாத்தியார்
    குறை சொல்கிறார்..//
    சான்சே இல்லை... ஹாஹஆஹா!!!!!

    ReplyDelete
  2. கவிதையில் ஹாஸ்யம்!
    அருமையான கவிதை.
    //எனக்கு
    சிரசாசனமே சரியாக
    வரவில்லை என்று
    எனது யோகா வாத்தியார்
    குறை சொல்கிறார்..//
    சான்சே இல்லை... ஹாஹஆஹா!!!!!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...