Wednesday, February 22, 2012

அற்பனின் ஆயுள்....

தற்கொலைக்கு
ஆயத்தமானவனுக்கு
தலைவலிக்கான
தைலம் எதற்கு??


வாழ்ந்தே
ஆகவேண்டும்
என்று பிடிவாதமாக
வாழ்ந்த நாட்களில்
கூட எவ்வளவோ
தலைவலிகளைப்
பார்த்தாயிற்று..
தைலங்களைத்
தவிர்த்துமாயிற்று...

ஆனால் ஒரே
முடிவாக சாவைத்
தேர்ந்தெடுத்த
பிற்பாடு
தைலம் வாங்க
சில்லறை தேடுவது
விநோதமாக உள்ளது
அவனுக்கே...


தேடிய சில்லறை
காணாததால்
நூறு ரூபாய் கொடுத்து
தைலம் கேட்டான்..
நூறுக்கு சில்லறை
இல்லை என்றதும்
தலைவலியோடே
செத்துவிடுவோமா என்று
யோசித்தான்...


தைலத்தை மட்டும்
வாங்கிக்கொண்டு மிச்ச
சில்லறையை வாங்காமல்
விட்டால் தான் என்ன
என்று மறுபடி 
கடைக்கு வந்தான்...


சில்லறை வேண்டாமென்று
தைலம் வாங்கித் தடவியவன்
தலைவலி தீர்ந்ததும்
மிச்ச சில்லறை கேட்டு
கடைக்காரனுக்கு தலைவலி
உண்டு பண்ணினான்...


கோபத்தில்
சில்லறை தராத கடைக்காரன்
மாரடைப்பில் செத்துப் போனான்..
இவன்..
-மிச்ச சில்லறையை 
வாங்கமுடியாமல் 
தற்கொலையைத் 
தள்ளிப் போட்டான்...!!
                                                       

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...