Thursday, February 2, 2012

சில நேரங்களில் சில கவிதைகள்...


       

பிரார்த்திப்பது
பல கடவுள்களை
என்பதால்---
எதிலாவது
வெற்றி பெறுகையில்
காப்பாற்றியது
எந்தக் கடவுள்
என்கிற குழப்பம்
எப்போதுமே...!!
--------xxxxx--------

அனிச்சையாக
நடந்து கொள்ள 
முயல்கிறேன்...
---விபத்துக்களை
எதிர்பார்க்கிறேன்;
--விழிப்பினூடே
கனா காணுகிறேன்..,
---உறக்கத்தில்
உன்னோடு உரையாடுகிறேன்..;
---இறந்து 
இரண்டு மணி நேரம்
கழித்து 
எழுந்து கொள்ள 
யத்தனிக்கிறேன்...??
--------++++++---------

மறுபிறப்பு 
உண்டென்கிற 
அனுமானங்கள் 
சலிப்பை ஏற்படுத்துகின்றன..!
--இந்த மாதிரி
எத்தனை பிறவிகள்
எவ்வளவு முறைகள்
சலித்துக் கொண்டேனோ??
-------========---------             


சுந்தரவடிவேலு 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...