Thursday, June 9, 2011

பலவீனமான சபலங்கள்..

ஆபாசங்களை மிகவும்
ரசிக்கிற வியாதி மாதிரி
கேவலமான வியாதி
வேறொன்று இல்லை...

ஓர் பிரத்தியேகமான
பிராயத்தில் தவிர்க்க
அசாத்யமாகி விடுகிறது
அநேகம் பேர்களுக்கு..

இயல்பாகவே சபலங்களின்
பக்கம் சாய்ந்து .. மீள்வதற்கு
அதிக நாட்களாகி விடுகிறது..
அல்லது மீள்வதே இயலாத
கருமமாகி விடுகிறது..

மலரினும் மெல்லிய காமம்
முள்ளாய் கீறியும்
நெருப்பாய் சுட்டும் கூட
அதன் வசீகரம் வதங்கிப்போவதில்லை..

எந்த வீழ்ச்சியும் அனாவசியமாகி
விடுகிறது காமம் மய்யப்படுகையில்...
குற்ற உணர்ச்சிகளும் , தர்ம சங்கடங்களும்
தன் பங்கிற்கு குறுக்கீடுகள் செய்தாலும்
வேசி மார்பில் புதைந்து விடுகிறது
எல்லா நல்லவைகளும்...

இந்த ரசாயனம் தன்வசம்
என்கையில் ரகசியமாக
ரசித்து விட முடிகிறது
சுலபத்தில்... 
இதே ரசாயனம் 
பிறர் வசம் கண்டால்
மாத்திரம்
 கோபம் கொப்பளிக்கிறது
அநியாயமாகப் படுகிறது...

சபலங்கள் அடையாளப்படாத
வரைக்கும் மிகவும் அன்யோன்யமானது..
பிறர் அடையாளம் கண்டுவிட்டாலோ
அதனை சொல்லி விட்டாலோ
வெட்கமும் வேதனையும் சொல்லி மாளாது...

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...