Sunday, March 27, 2011

பொய்யான உண்மைகள்..

அநியாய பிரார்த்தனைகள்
எல்லாம் நிறைவேறவில்லை
என்பதற்காக ஆண்டவனைக்
கோபித்துக்கொள்கிற 
சிறுபிள்ளைத்தனங்கள் ...

கர்பக்கிரஹ சுவாமி 
எவ்வளவு அலங்கரிக்கப்
பட்டிருந்தாலும் ,
எதிரில் நின்று கும்பிடுகிற
பெண்களில் லயிக்கிற
பிறவிச்ச்சபலம்... 

கோவிலை விட்டு
வெளியே வந்த பிறகு
கூட, சுவாமியிடம்
என்ன வேண்டினோம்            .
என்கிற ஞாபகமே 
அற்ற மமதை...

கோபுரக்கலசத்தைக்கூட
கண்டு கொள்ளாமல் 
கோவிலைக்கடந்து
போகிற நாஸ்திகன்
மிகவும் மேன்மையானவன்
நேர்மையானவன் ..!

--கோவிலுக்குள் சென்று
வெறுமனே திரும்பி 
வருகிறவனை 
ஒப்பிடுகையில்....!!                  

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...