இன்பங்களும் துன்பங்களும்
இனம் புரியாமல் அடர்ந்து
கிடக்கின்றன .. எதிர்காலங்களில்..!!
நம் எல்லா தீர்க்கதரிசனங்களையும்
புறந்தள்ளி விட்டு
காலம் அதன் போக்கில்
நம் சூழல்களை அரங்கேற்றும்..
சற்றும் எதிர்பாராத
எவ்வளவோ விஷயங்கள்
சுலபத்தில் நிகழக்கூடும்..
நடக்கும் என்று ஆணித்தரமாக
நம்பியவை நாமதேயமே அற்று
நசுங்கிப்போயிருக்கும்...
உச்சியில் நிறுத்தும்
புரட்டிப்போடும்
அதல பாதாளத்தில் கொண்டு சேர்க்கும்..
அசை போட அதிகம்
உபயோகப்படும் இறந்த காலம்..
நிகழ்ந்து முடிந்த சுவாரசியங்களும்
தர்ம சங்கடங்களும் , சுகதுக்கங்களும்
இன்னபிறவும் ..
மேற்சொன்ன
இறந்த எதிர் ஆகிய
எல்லா காலங்களை
அலசவும்
மிகவும் பயன்படுகிற
நிகழ்காலம் மாத்திரம்
ஏனோ பிரக்ஞை அற்றே
கிடக்கிறது அநேகம் பேர்களிடமும்...!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment