மக்கள் தொகை
பெருகி விட்டது...,
ஆனால் மக்கள்
மனசுகள் சுருங்கி
விட்டன...
சுயநலம் என்பது
யதார்த்த நிகழ்வாகி
விட,
பொது நலமிகளை
விநோதமாயும் அந்நியமாயும்
பார்க்கிறார்கள்....
பிரச்சினை தனக்கு
நேர்கையில்
பிறருதவி எதிர்பார்ப்பவர்கள்
பிறர் பிரச்சினைகள்
குறித்து கிஞ்சிற்றும்
பிரக்ஞை அற்று நகர்கிறார்கள்..!!
நம் வீட்டுக்குழந்தைகள்
கூட தொலைக்காட்சிப்
பெட்டிகளையும் கணினிகளையும்
மாத்திரமே உற்ற சிநேகிதர்களாக
வரித்திருக்கின்றன...
கார்ட்டூன் பொம்மைகள்
மீது வைத்துள்ள அக்கறை கூட
உடன் பிறந்த தம்பி தங்கையிடம்
இருக்குமா என்பது சந்தேகமே...
-- இப்படி எலும்பு சதை ரத்தம்
மீதான பாச பந்தங்கள் எல்லாம்
பஞ்சு திணித்த பொம்மைகள் மீதும்
நிழலாடுகிற மாய பிம்பங்களின் மீதுமே
இந்தத்தலைமுறை குழந்தைகளுக்கு..!!
--தொட்டில் பழக்கமே
இப்படி என்கிற போது, சுயநலம்
சகஜமாகி விடுவதும் சகஜம் தானே???
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
கவீத சூப்பரா கீது மச்சி... எப்டி மச்சி இப்படி எல்லாம் தின்க் பண்றே?.. ஒனக்கு இர்க்கற தெறமைக்கு நீ பாரீன்ல இருக்கணும்.. இங்கன குந்தீகினு இன்னா பண்றே?
ReplyDelete-------------ரொம்ப நாளா ஒரு போஸ்டுக்கும் கூட கமெண்டே வரலே.. அதனால தான் நானே சும்மா டபாய்ச்சு பார்த்தேன்.. இனியாச்சும் எல்லாரும் திருந்தி கமெண்டுபோடட்டும்..