Thursday, June 17, 2010

இருட்டுச்சூரியன்..

நான் உன் சூரியன்..
உன் மலை மார்புகளுக்குள்
புதையுண்டு
அஸ்தமிக்க விரும்புகிறேன்
அன்றாடம்...
அக்கினிக்குஞ்சாய்                                               
என்னைப்பராமறிக்கிறாய்..!
-உன் மார்புச்சூட்டில்
இந்த சூரியன் குளிர்காய்கிறது..!!

உன் காதல் ஒத்தடத்தில்
ஏன் ஏக்க வீக்கம் இளைக்கிறது..,
ஆனால் காமம் பருத்து விட்டது...
காமம் இளைப்பதற்கான
எந்த ஒத்தடங்களையும்
மறுக்க விரும்புகிறேன்..!

உன்னில் புதையுண்ட பிற்பாடு
மறுபடி மீள்வதற்கான
எந்த ஆயத்தங்களையும்
மேற்கொள்ளப்பிடிக்கவில்லை..!
உன்னில் அஸ்தமித்த பிற்பாடு
மறுபடி வெளியேறி
உதிக்கிற உத்தேசமே
அற்றுப்போய் விட்டது..!!

உன்னுள் உள்ளொளி பாய்ச்சி
எல்லா சுடர்களையும்
உன்னிடமிருந்தே உலகம்
கடன் பெறட்டும்..!!
சூரியனைக் கபளீகரித்து
விட்டதாக உன்னை சொல்வார்கள்,
சொல்லி விட்டுப்போகட்டும்..!         

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...