Monday, July 5, 2010

அனிச்சையாய் நிகழ்வன...

முன்பென்
காமம் தூண்டிய 
அவளது முலைகள்
இன்றென்
குழந்தையின் 
பசிக்கான அமுதசுரபி 
ஆகி விட்டன...

-பாசம்  பிரதானமாகி
 விட நேர்கையில் எல்லாம்
காமம் பின்னடைவாகிறது...

பதுங்கிப் பாய்கிற புலிகுணம்
கொண்டது காமம்...                                      
பிற்பாடு பாசம்
புள்ளி மானாய் துள்ளி மறையும்..

ஆனபோதிலும் 
புணர்ச்சியின் போதிலாக 
சற்றே
குழந்தையின் அழு குரல் 
கேட்டாலும் என்னை                
தூரம் தள்ளிப்போட்டு 
விடுகிறாள் என் மனைவி..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...