Saturday, December 5, 2009

பிரக்ஞையுள்ள முகமூடிகள்..

அனிச்சைகளும் விபத்துக்களும்
எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிற
வினோதம் என் வாழ்வு நெடுக...!

ஜாக்கிரதைகள் மீதான வெறி..
அஜாக்கிரதைகளை
அநாகரீகமாக உணரும் மருட்சி..!!

கடிக்காமல் பறக்கிற
கொசுவைப்பார்த்தாலே
ஜீவகாருண்யம் முடிவுக்கு வந்து
விடுகிற நிலைமையில்--
இன்னும் கடித்து விட்டாலோ
ரௌத்ரம் வேறு கைகோர்த்துக் கொள்கிறது..

நடிக்கிற பாத்திரமாய்க் கூட
அசௌகரி ய ங்களுக்கு சந்தர்ப்பம்
அளிக்க முடியாமல் இருக்கிற எனக்கு
--சௌகரியமாக வாழ்க்கையை
நிதர்சனத்தில் எங்கனம் அனுசரிப்பது
என்பது புரியாத புதிராயும்
கேள்வியாயும் வியாபித்துக்கிடக்கின்றன...

சுந்தரவடிவேலு..

4 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. ரசித்தேன்...

    வெற்றி பெற வாழ்த்துகள்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...