முன்பெல்லாம் கிறிஸ்துமஸ் நாளன்று நான் சர்ச் சென்று வருவேன்.. சர்ச் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.. மிகவும் நீண்ட அதன் விஸ்தாரமான தன்மை எனக்குள் ஓர் தாங்கொணா மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும்.. மண்டியிட்டு அமைதியாக பிரார்த்திக்கிற கிறிஸ்துவர்களும் அவர்களது பக்தி முறைகளும் எனக்கு அலாதி ஆனந்தம்..
ஓர் ஹிந்துவாக கோவில்களை நான் மிகவும் ரசிக்கிறவன் என்றாலும் .. பிற மதம் சார்ந்த விஷயங்களும் என்னை அவ்வப்போது ஈர்க்கும்...
இயேசு ஜனித்தது மற்றும் , முள்கிரீடத்தில் அவரை துன்புறுத்தியதும், மற்றும் ஆணி கொண்டு சிலுவையில் அறைந்த விஷயங்களும் .. அவர்களது கற்பனைக்கேற்ப அலங்காரம் செய்து வைத்திருப்பதை பார்க்கையில் ஓர் பரவசம்..
திருவள்ளுவரின் உருவமோ ஜீசஸின் உருவமோ மனிதர்களின் கற்பனை தான் என்றாலும், அந்தக்கற்பனையே உண்மையைக்காட்டிலும் வீரியம் பொருந்தியதாயும் பொருத்தமானதாகவும் அமைந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்..
என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment