போட்டிகள் எனக்குள் தாங்கொணா வெறிகளையும் கற்பனைகளையும் விதைக்குமேயன்றி அதில் ஈடுபடவோ வெற்றி பெறவோ சாத்யப்படுவதில்லை என்பதை பல போட்டிகளில் பங்குபெற்று உணர்ந்திருக்கிறேன்.
ஆனாலும் போட்டி என்பது ஓர் ஆரோகியமான போக்கு என்பதை அறிவேன். எந்த விதமான தன்மைகளுக்கும் போட்டி என்பது இன்றியமையாத ஒன்றென்றே கருதுகிறேன். போட்டி இல்லாத எந்த விஷயங்களும் ஓர் வீரியமிழந்தே காணக்கூடும். போட்டி என்று வந்த பிறகே அந்த விஷயம் வசீகரமாக மாறும்..
அவ்விதமாகத்தான் தமிழ்மணம் அறிவித்திருக்கிற போட்டியை உணர்கிறேன். என் பங்கிற்கு எனது ரெண்டொரு படைப்புகளை ... அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க .... வெளியிட முனைந்து இருக்கிறேன் என்ற போதிலும் , பல அறிவுப்பூர்வமான எழுத்தாளர்கள் பங்கு பெறுகிற இந்த கோதாவில் என் பங்கேற்பு கேலிக்குரியது என்பதை அனுமானித்தே நான் என் படைப்புகளை வெளியிட நேர்ந்திருக்கிறது...
நன்றி.. வெற்றி பெறக்காத்திருக்கிற புத்திசாலிகளுக்கு என் ADVANCED CONGRATULATIONS.
அன்பு
சுந்தரவடிவேலு....
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment