Monday, December 7, 2009

அல்வாவின் அடிமைகள் நாம்..

மிக அன்னியமாகி விட்ட வசந்தங்கள் குறித்து நானும் வெட்கமில்லாமல் அசை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு மிக நெருக்கமாக சிநேகம் வைத்துள்ள சங்கடங்களையும் வேதனைகளையும் அப்புறப்படுத்தவும் தவிர்த்து ஒழிக்கவும் நானும் படாத பாடு படுகிறேன் என்றாலும் அவைகள் வெட்கமில்லாமல் என்னை அணுகி, நான் வசந்தங்களை கற்பனையில் அசை போடுவது போலவே நிஜத்தில் என்னை அவைகள் அசை போடுகின்றன.

எந்த சித்தாந்தங்களுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கையானது அதன் போக்கில் ஓர் வகையான சூட்சுமத்தில் பயணித்து நம்மையும் உடன் அழைத்துக்கொண்டு போகிறது, நாம் விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்.... போராடியேனும் ஜெயித்தாக வேண்டும் என்கிற தீவிர வெறி ஒரு புறம் இருந்தாலும், காலமும் நேரமும் சில நபர்களுக்கு மாத்திரமே அதிகம் கை கொடுக்கிறது .. பல பேர்களுக்கு அல்வா கொடுத்து விடுகிறது...


இப்படியாக அல்வாவுடனாக சப்புக்கொட்டிக்கொண்டு பலரும் அலைந்து கொண்டிருக்க ... அதுவே கூட நாளடைவில் சுவாரசியப்பட்டும் போகிற கேவலக்கூத்துக்களும் அரங்கேறி விடுகின்றன..


அல்வாவில் மண் ஒட்டியிருந்தாலுமே கூட அதனை தட்டி விட்டோ அல்லது மண்ணுடனாகவோ சாப்பிடவும் பழகிக்கொண்டோம்... எதனையும் ஜீரநித்துப்பழகி விடுகிற நமது பெருந்தன்மை நமக்கே நம் மீது ஓர் பரிதாபம் கலந்த ஆச்சர்யத்தைக் கொடுத்து விடுகிறது...


இப்படி அல்வா தந்த காலம் மனசிறங்கி ஒரு தருணத்தில் கை கொடுக்க முன் வந்தாலுமே கூட அல்வாவுக்கு அடிமைப்பட்ட பலரும் காலம் கொடுக்கிற கையை திருகி எறியக்கூட துணிந்து விடுகிறோம்....



சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...