நீ ஞாபகம் வரும்போது
மாத்திரமே யதார்த்தமாக
எழுத வருகிறது எனக்கு..

மற்றைய எது குறித்து
எவர் குறித்து எழுதினாலுமே
வலிய திணிக்கப் பட்ட
செயற்கை அசிங்கம்
அங்கே சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்வதை
சுலபத்தில் அடையாளம்
காண்பது சாத்தியமாகி
விடுகிறது எனக்கு.. !
ஆனால் எனது
புனைதலில் நீ
ஆக்கிரமிக்கப் படுகையில்
ஒரு பூ செடியில்
பூக்கத் துவங்குகிற
இயல்பு அங்கே
பிறக்கிற ஆச்சர்யத்தை
உணர்கிறேன்..

உடல்ரீதியாக
அன்றெல்லாம் உன்னை
தரிசிக்க நேர்ந்த
அந்த அற்புதத்
தருணங்கள் கூட
மிக நேர்த்தியான,
நெடிய உபவாசத்திற்குப்
பிறகு வருகிற
பசி போன்று
அலாதி உணர்வுகள்
ததும்பின எனில்
மிகையன்று.. !!
இன்றோ
நாமதேயமற்றுப்
போய் விட்டீர்கள்
நீயும் உமது முகவரியும்..
காலத்தின் கட்டாயமோ
அல்லது உமது தீர்மானமோ
அறியேன்,
பரஸ்பரம் இனி இப்
பிரபஞ்சம் விட்டு
நழுவும் நாள் வரைக்கும்
உன்னை எனக்கு
தரிசிக்கிற வாய்ப்பே
சிறிதும் இல்லை என்கிற
சுடும் உண்மையை
ஒருவகை அவநம்பிகையினூடே
அடைகாத்து வருகிறது
மனது.. !!

மாத்திரமே யதார்த்தமாக
எழுத வருகிறது எனக்கு..
மற்றைய எது குறித்து
எவர் குறித்து எழுதினாலுமே
வலிய திணிக்கப் பட்ட
செயற்கை அசிங்கம்
அங்கே சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்வதை
சுலபத்தில் அடையாளம்
காண்பது சாத்தியமாகி
விடுகிறது எனக்கு.. !
ஆனால் எனது
புனைதலில் நீ
ஆக்கிரமிக்கப் படுகையில்
ஒரு பூ செடியில்
பூக்கத் துவங்குகிற
இயல்பு அங்கே
பிறக்கிற ஆச்சர்யத்தை
உணர்கிறேன்..
உடல்ரீதியாக
அன்றெல்லாம் உன்னை
தரிசிக்க நேர்ந்த
அந்த அற்புதத்
தருணங்கள் கூட
மிக நேர்த்தியான,
நெடிய உபவாசத்திற்குப்
பிறகு வருகிற
பசி போன்று
அலாதி உணர்வுகள்
ததும்பின எனில்
மிகையன்று.. !!
இன்றோ
நாமதேயமற்றுப்
போய் விட்டீர்கள்
நீயும் உமது முகவரியும்..
காலத்தின் கட்டாயமோ
அல்லது உமது தீர்மானமோ
அறியேன்,
பரஸ்பரம் இனி இப்
பிரபஞ்சம் விட்டு
நழுவும் நாள் வரைக்கும்
உன்னை எனக்கு
தரிசிக்கிற வாய்ப்பே
சிறிதும் இல்லை என்கிற
சுடும் உண்மையை
ஒருவகை அவநம்பிகையினூடே
அடைகாத்து வருகிறது
மனது.. !!