Friday, April 17, 2015

அன்றாடம்..

ஒவ்வொரு விடியல் துயில் கலையப் பெற்றதும் நேற்றென்பது நம்மிடமிருந்து நழுவப் பெற்றதும் இன்றை இறுகப் பற்ற வேண்டுமென்கிற அவசரமும் பல்துலக்கும் முன்னரே பற்றி விடுகின்றன நம்மை.. 

நம்முடைய துரிதம் என்பது அளவுகோல்களைக் கடந்து அதீதமாக, ஒரு பிரளயம் போன்று நம்மிலிருந்து பீறிட நேர்ந்தாலும், நமக்கு நடைபெறுகிற சங்கதி என்பது அதன் கதியிலே தான் நடைபெறும் என்கிற மிக சாதாரண கூற்று நமக்கேனோ ஒவ்வொரு நாளும் பிடிபட மறுக்கிற வழுக்கல்  மீனாகவே உள்ளது.. 

சில அபூர்வ நாட்களில், சோம்பி நாம் தேமே என்று கிடந்தாலும் நடைபெறுகிற காரியங்களின் வீச்சு சற்றும் எதிர்பாரா வகையில் பிரம்மாண்டமாக நேர்ந்து விடுவது உண்டு. 
நாம் பெரிதாக திட்டம் தீட்டி மலையை நகர்த்துகிற முஸ்தீபில் உட்கார்ந்து இருந்தாலும்  ஒரு கடுகைக்  கூட அசைக்க முடியாமற் போய் விடுகிறது.. 
ஆனால் ஒருவித அவநம்பிக்கையின் நிமித்தம் ஒருவகை இயலாமையின் நிமித்தம் 'ஸ் .. அப்பாடா. போதுமடா சாமி ..' என்று அரவமற்ற ஓரிடத்தில் அயர்ந்து கிடக்கையில், திருப்பதி லட்டு, நெல்லை அல்வா, பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் மாம்பழம் , பண்ருட்டி பலா என்று எல்லாவற்றையும் வாயில் வைத்தடைத்து திண்டுக்கல் பூட்டைக் கூடப்  போட்டுப் பூட்டி விட்டுப் போகும் காலம்.. 

1 comment:

  1. திண்டுக்கல் பூட்டு எதற்கெல்லாம் பயன் தருகிறது...! ஹிஹி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...