Tuesday, March 25, 2014

மலேசிய விமானம்..

கடந்த 20 நாட்களாக உலகத்தையே ஒவ்வொரு வகையறா அனுமானத்தில் உறைய வைத்திருந்த அந்த மலேசியா விமானம், கடலில் வீழ்ந்து சின்னாபின்னமாகி விட்டதான தகவல் எல்லாரது மனசுகளையும் ரணகளப் படுத்தி விட்டதென்றே சொல்லவேண்டும்.. 

எங்கேனும் நாடு கடத்தப் பட்டு ரேடாருக்குப் புலனாகாத விதத்தில் பயணிகள் யாவரும் அவஸ்தையில் தவிப்பதாக .... 
உண்ண  உணவின்றி , அருந்த நீரின்றி குழந்தைகளும் வயோதிகர்களும் பேராவஸ்தை அனுபவித்து வருவதாக.. 
எவ்வளவோ தர்மசங்கடங்கள் நேர்ந்தாலும் பரவாயில்லை.., எப்படியோ மறுபடி ஓர் குறிப்பிட்ட நாளில் நாடு திரும்பினாலே போதும் என்கிற உலக மக்களின் பிரார்த்தனைகள்.. 

யாவும் பொய்த்து .. மூழ்கி மூர்ச்சையான செய்தி நம்மை சற்றேனும் மூச்சடைக்கச் செய்தது.. 
அந்த இருநூற்று சொச்சம் பேர்களுக்கான மரணம் இவ்வளவு பயங்கரமாகவா வழங்கப் பட்டிருக்கவேண்டும்?.. பெருவாழ்வு வாழ்ந்த அவர்கட்கு மரணமும் பெருமரணமாகவே விநியோகிக்கப் பட்டுள்ளது ஆண்டவனால்..!!

இதற்கு முன்னர் இப்படி ஓர் சோக வரலாறு நிகழ்ந்தது இல்லை.. 
சம்பவம்  நிகழ்ந்த மாத்திரத்தில் செய்தியாக வலம் வந்து கேட்டே பழகிப் போன நமக்கு.. இந்த சம்பவம் ஓர் மர்மத் துயரை நம்மில் நீடிக்கச் செய்து .. நேற்றைய இதன் செய்தி ஓர் தாங்கொணா உணர்வொன்றை கிளர்ந்தெழச் செய்திற்று.. 

இவர்களது உறவினர்களின் துயரை சொல்ல வார்த்தைகள் ஏது ?.. ரோட்டில் அடிபட்டுச்  சாவு நேர்ந்திருந்தால் கூட கடைசியாக அந்த உடலைப் பார்த்தேனும் ஓர் ஆறுதல் காண வாய்ப்புண்டு.. ஆனால், இந்தக் குரூர விதியின் வசத்தில் .. விரல் நகங்களைக் காண்கிற சூழ்நிலை கூட இல்லாதது பரமவேதனை.. 

சுறாக்களும் திமிங்கலங்களும் மீன்களும் இன்னும் இன்னும் இவர்களைத் தின்று தின்று பசி ஆறிக் கொண்டிருக்குமோ ? அல்லது தின்று தீர்த்திருக்குமோ??

நம்மால் இயன்றதெல்லாம் இவர்களது ஆன்மா சாந்தி பெறப் பிரார்த்திப்பதே  அன்றி  வேறு என்னவாக இருக்க முடியும்?.. 

ஒரு விடுமுறை நாளிலோ , அல்லது மற்ற விழாக் காலங்களிலோ, இவர்களை உண்ட மீன்கள் .. மீன்மார்க்கெட்டில் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.. 
பேரம் படிந்த பிற்பாடு, அடுப்பில் குழம்பாகக் கொதிக்கத் துவங்கும்.. !!

3 comments:

  1. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...

    ReplyDelete
  2. மிக கொடுமையான முடிவு! வருத்தம் மட்டுமல்ல நினைக்கும் போதே நெஞ்சை பதற வைக்கிறது!

    ReplyDelete
  3. இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். வேறு எதுவும் சொல்வதற்கில்லை....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...