Monday, March 24, 2014

வந்துட்டான்யா வந்துட்டான்.

எனது மனதிற்கினிய அனைவருக்கும் .. 

நான் சுந்தரவடிவேலு.. எமது கணினி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக எனது வசம் அல்லாமல் பழுதை அகற்றியாக வேண்டிய ஓர் சூழலில் இருந்தமையால்-- நான், எவ்வித இடுகைகளும் இடுவதற்கு வாய்க்கவில்லை.. 

எனது இடுகைகள் அற்று பிளாக் உலகமே வெறிச்சோடி கிடந்திருக்கும் என்பதை இவன் நன்கறிவான்.. என்ன செய்வது, காலத்தின் கோலம்.. 
நல்ல வேலையாக .. நானும் எனது கணினியும் மீண்டும் மீண்டு வந்துவிட்டோம் உங்கள் அனைவருக்கும் விருந்து படைக்க.. இனி, உங்களுக்கெல்லாம் பரமானந்தம் தானே?..ஹூஹ்............

நானில்லாமல் எமது ரசிகர் பட்டாளம் இந்தப் பத்து நாட்கள் அடைந்த இடர்களை வார்த்தைகள் போட்டு நிரப்பும் சாத்யம் அறவே இல்லை.. 
இனி இவ்வித ஹிம்சைகள் நேரா வண்ணம் நன்கு பழுதை நீக்கி உள்ளார் திரு. முரளி அவர்கள்.. அவரும் "அன்பே சிவம்" என்கிற பெயரில் இடுகைகள் அவ்வப்போது எழுதி வருவதாக எமது நண்பர் வெண்புரவி அருணா அவர்கள் சொல்லி, கேள்வி.. 

"வந்துட்டான்யா வந்துட்டான்.. இம்புட்டு நாளா நிம்மதியா இருந்தோம்.. மறுபடி வறுத்தெடுக்க கிளம்பி வந்துட்டான்யா இந்த வடிவேலன்.. அடிக்கிற வெய்யில் போதாதுன்னு இவன் வேற உப்புசம் பண்ணப் போறான்!"
--அநேகமாக, இதுதான் உண்மையாக இருக்க முடியும்... ?

எது எப்டியோ.. இதோ.. இதோ.. வந்தே வந்துட்டேன்..! ஹிஹி!!


4 comments:

  1. ஹா.. ஹா... வருக... வருக...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முரளி.. நல்ல எழுத்து வன்மையுள்ள பதிவர். அவரது பக்கங்களை படிக்க http://eniyoruvithiseivom.blogspot.in/
    கலக்குங்க வடிவு..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...