Monday, December 2, 2013

காதலை..!!

எனது கனவுகளை
சூறையாடி விட்டாய்.. 
எனது கவிதைகளைக் 
கசக்கி எறிந்து விட்டாய்.. 

எனது ரசனைகளைக் 
காயப் படுத்திவிட்டாய்.. 
எனது நம்பிக்கைகளை 
நாசமாக்கி விட்டாய்.. 

என்னையும் எனது 
மன உணர்வுகளையும் 
துவம்சம் செய்வதில் 
அப்படி என்ன சுவாரஸ்யம் 
உமக்குப் பெண்ணே?

இத்தனை செய்து விட்ட 
உன்னால் ஒன்றை மாத்திரம் 
ஒன்றுமே செய்ய முடியவில்லை.. 
உன் மீதான எனது காதலை..!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...