Sunday, May 19, 2013

அதிமுக .. ஜெயலலிதா.. சில அபிப்ராயங்கள்..

நீண்ட நாட்களாக இதனை எழுதி விடவேண்டும் என்கிற அவா பீறிட காத்திருந்தேன்.. ஆனால் இதற்காக நான் சில கட்சி அபிமானிகளின் சங்கடங்களுக்கும் கோபங்களுக்கும் ஆளாக நேருமோ  என்பதால் இந்த எனது கருத்து சுதந்திரத்தை சிறைப் படுத்தி வந்தேன்...

ஆனால் எத்தனை நாட்கள் தான் சிறைப் படுத்தி வைப்பது.. அதுவும் சுதந்திரத்தை..!!

நமது தமிழக முதலமைச்சர் .. அம்மா .. தாய்.. புரட்சித் தலைவி.. என்கிற பல அடைமொழிகளை பெற்று உலா வருகிற ஜெயலலிதா குறித்து தான் சிலவற்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அதன் நிமித்தமாக ஆட்சேபங்கள் இருக்கும் பட்சத்தில் பின்னூட்டம் இட வேண்டுகிறேன்..

புதிதாக நான் ஒன்றும் சொல்லி விடப் போவதில்லை.. எல்லாரும் அறிந்த ஓர் சாதாரண விஷயத்தை தான் இங்கே உங்களிடத்து focus செய்யவிழைகிறேன்..

அன்றாடம் நாமெல்லாம் அதிமுக வின் சானல்களை கண்டு களித்து வருகிறோம்.. அவைகளில் எல்லாம் ஜெ .வின் துதியைக் கேட்டுக் கேட்டு நம் காதுகள் புளித்துப் போய் விட்டன..

அதுவும் அந்த சட்டமன்றத்தில் அந்த அதிமுக கட்சி அமைச்சர்கள் கூடி அந்த மர டெஸ்க்கை கைகளால் ஓங்கி ஓங்கிக் குத்து விடுவதைப் பார்க்கையில் வருகிற எரிச்சலுக்கு அளவு கோல் ஏதேனும் உண்டா?

அம்மாவை வர்ணித்துப் பேசுகிற அமைச்சர்கள்.. பிற கட்சித் தலைவர்களை மிகக் கேவலமாக சாடுவதும், அம்மாவிற்கு மாத்திரம் சகட்டு மேனிக்குப் புகழாரம்  சூட்டுவதும்.. அதையெல்லாம் கேட்டுக் கேட்டு முகத்தில் ஓர் புன்னகையை  சந்தோஷத்தை ஜெ அவர்கள் வெளிக் காண்பிக்கையில்.. ஒரு நபருக்கு இவ்வளவு வர்ணனைகள் மற்றும் பாராட்டுக்கள் தேவைப் படுகின்றனவா.. இதிலெல்லாம் இப்படி எந்நேரமும் சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பது  சாத்யப் படுகிறதா? என்றெல்லாம் வியக்க வேண்டி உள்ளது..

வாழ்வாதாரமே வெடிவைத்துத் தகர்த்தது போல இங்கே மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.. சின்னவெங்காயம் தக்காளி வாங்க தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்..

அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிற நபர்களுக்கு மாத்திரம் எட்டு சதவிகிதம் பதினாறு  சதவிகிதம் பஞ்சப்படி , டியர்னஸ் அலவன்ஸ் என்றெல்லாம் கொடுத்து மேலும் மேலும்  கொட்டிக் கொடுத்து.. பிற மக்களை சொத்தைக் கத்தரி  வாங்கக் கூட காசில்லாமல் செய்வது என்ன நியாயம்?

இதனைப் படிக்கிற அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் எனது அபிப்ராயம்  "போடா புண்ணாக்கு" என்பதாக இருக்கலாம்.. ஆனால், அரைவயிறு சோற்றுக்கே  அன்றாடம் போராட வேண்டிய ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இதன் நியாயங்களும் வலிகளும் நன்கு புரியக் கூடும்..

சும்மா டெஸ்க்கை தட்டுவதை நிறுத்தி விட்டு ..இல்லாதவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி ஏதேனும் அவர்களுக்கு ஓர் நல்வழியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மிகத் தாழ்மையோடு  வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..

மற்றபடி நான் அதிமுக கட்சியின் எதிர்ப்பாளனும் அல்ல.. திமுகவின் அபிமானியும் அல்ல.. தவறுகளை எனது வீட்டு நபர்கள் செய்தாலும் உடனே சுட்டிக்  காட்ட நான் அவசரப் படுகிறவன்.. நாம் அனைவருமே அப்படித்தானே??

4 comments:

  1. உங்களின் ஆதங்கம் எல்லாருக்கும் உண்டு...

    அவர்களுக்கு சாதாரண மக்களைப் பற்றிய நினைப்பேது...?

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்! புகழாரம் கேட்டு காது புளித்துவிட்டது நமக்கு! அம்மாவுக்கு புல்லரிக்கிறதோ என்னமோ?

    ReplyDelete
  3. இதனைப் படிக்கிற அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் எனது அபிப்ராயம் "போடா புண்ணாக்கு" Yes Yes

    ReplyDelete
  4. இதனைப் படிக்கிற அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் எனது அபிப்ராயம் "போடா புண்ணாக்கு" Yes Yes

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...