Thursday, May 2, 2013

என்னாங்கறீங்க??

எதுவும் எழுதாமல் இருக்கிறோமே என்கிற உறுத்தல் ஓர் சொறி மாதிரி மனசை அரித்துக் கொண்டே இருக்கும், எதுவும் எழுதாத எல்லா தருவாய்களிலும்..
இந்த உறுத்தல் காகிதங்களில் எதையேனும் கிறுக்கிக் கொண்டிருந்த ப்ராயந்தொட்டு..
அனர்த்தமாகவேனும் எதையேனும் பிதற்றியாக வேண்டும்.. அல்லவெனில், கடமையினின்று வழுவிய ஓர் குற்ற உணர்வு..

"இவுரு பெரிய ரைட்டரு.. எழுதாட்டி என்னவோ ராயல்டி மிஸ் ஆயிடப்போற மாதிரி.." --- உங்களது நக்கலான முணகல்களை எனது செவிகள் நன்கு உணர்கின்றன...
..
அந்தந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் மாத்திரமே அந்தக் குறிப்பிட்ட காரியங்களை செவ்வனே செய்யவேண்டும் என்பது எழுதப் படாத விதி போலும்.. சம்பந்தமற்றவர்கள் அவர்கள் அந்தக் காரியங்களை விரும்பினாலும் அதனைத் தவிர்த்து விடவேண்டுமோ?.. அப்படி எல்லாம் என்னால் முடியாது.. ஒரு காரியத்தில் நான் பக்கா அமெச்சூராக இருந்தாலுமே கூட எனக்கது இஷ்டமென்கிற போது ஓர் பிரபல நபர் போல அதனை செய்து முடிப்பதில் ஓர் ஆத்மதிருப்தி... புறமிருந்து காண்பவர்களுக்கு வேண்டுமானால் அது அற்பத்தனமாகப் புரிபடலாம்..

இதே விதமாகத் தான் எல்லா துறைகளுமே...
எந்தத் துறையாயினும் அதன் மீதாக ஓர் பிரேமம் உண்டாயின் அதை செஞ்சுட்டுப் போய்க்கோடா ... சும்மா அவன் அப்டி நெனப்பான், இவன் இப்டி நெனப்பான்னு ஒவ்வொன்னுக்கும்  யோசிசுக்கினு கெடந்தோம்னா ஜல்தியா கீழ்ப்பாக்கம் தான் போவனும்..

சாப்பிடறது கூட அப்டித்தான். ஒரு அயிட்டத்து மேல ஆச வந்திடிச்சின்னு வச்சிக்குவோம்.. அது நம்ம ஒடம்புக்கே ஆவாட்டிக் கூட வாங்கி சாப்பிட்டுடனும்.. இல்லாங்காட்டி எம்புட்டு நாளு தான் ஜொள்ள விட்டுக்கினு சட்டையை நனச்சிக்கிட்டு.. அடச்சீ..

ஆனா பொம்பளைங்க மேட்டர்ல அப்டி இருக்காதீங்க ராசாக்களே.. ஏன்னா ரொம்பப் பேருக்கு அவுங்கவுங்க சம்சாரத்தைக் காட்டிலும் அடுத்தவன் சம்சாரம்  ரெம்ப வசீகரமா தெரியறது ஒரு கேவலமான யதார்த்தம்..
ஆறறிவு படைச்ச மனுஷப் பிறவியா இல்லாம அஞ்சறிவுப் பிராணியா ஜனிச்சிருந்தா இந்தப் பிரச்சினை இல்லை..

ஆனா மானமுள்ள மனுஷனா பொறந்துட்டு..??.. மனசுல ஆசையும் ஒடம்புல தெனவும் இருந்தா  கூட அடக்கி வாசிச்சொம்னா தான் சொச்ச காலத்தை சொதப்பலில்லாம ஓட்டமுடியும் .. என்னாங்கறீங்க??

2 comments:

  1. சரிங்க... அப்படியே பகிர்வுகளையும் தொடருங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...