Tuesday, June 26, 2012

வழக்கு எண் பாலாஜி சக்திவேல் ....

22.06.2012 வெள்ளிக்கிழமை அன்று வடகோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் வழக்கு எண் 18/9 படத்தை டைரக்ட் செய்த டைரக்டர் பாலாஜி சக்திவேல் அவர்களை பாராட்டி கோவை மக்கள் நடத்திய ஓர் விழாவில் பங்கேற்கிற வாய்ப்பொன்று எனக்குக் கிட்டிற்று... மிக எளிமையான விழா.. ஆனால் இனிமையான சுவாரசியமான விழா...
மாலை ஆறு மணிக்குத் துவங்குவதாக அறிவித்திருந்த விழா ஏழு மணிக்குத் துவங்கிற்று.. .. அவரைப் பாராட்ட இன்னபிற சினிமா டைரக்டர்கள் முதற்கண் பாராட்டிப் பேச, பிற்பாடு இன்னும் சிலர் பேசினர் ..
நிறைவில் பாலாஜி அவர்கள் பேசுகையில் கேட்பதற்கு மிக யதார்த்தமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..

பலவற்றை அவர் பேசினார் என்றபோதிலும், சிலவற்றை மாத்திரம் நான் ஹை லைட்ஸ் ஆக இங்கே பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்..

"நீங்கெல்லாம் என்னை ஹா ஹோ வென்று பாராட்டும் வகையில் பெரிதாக சாதித்த உணர்ச்சியே இல்லை... எனக்குத் தெரிந்த சில விஷயங்களை விஷ்வல் ஆக்கி சமர்ப்பித்தேன்... கதையைக் கூட எவரிடமும் தெளிவாக சொல்லவில்லை..அவ்வப்போது எனக்குத் தோன்றிய  காட்சிகளை சுட்டுக் கொண்டே வந்தேன்..."
"
"ஷங்கர் வழங்கும் ... லிங்குசாமி வழங்கும்.. என்கிற பானர்களோடு வந்தால் தான் பார்க்க வருகிறார்கள்... நமக்கென்ன.. எப்படியோ மக்களை வரவழைத்த பிறகு நமது சாராம்சங்களை அவர்களில் திணிப்பது ... அதனை அவர்கள் ரசனைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வது, அல்லது புறக்கணிப்பது.. அவ்வளவே"


என்னைப் பாராட்டிப் பேசியவர்களில் பலரும் என்னைவிட மேதைகளாக அறிவுக் கூர்மை உடையவர்களாகத் தெரிகிறார்கள்..ஆனால் இங்கே நான் படம் எடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்..


எனது பட்ஜெட் பத்துக் கோடி இல்லை .. என்னால் வெறும் பத்து லட்சத்தில் கூட ஓர் உன்னதமான உருப்படியான படத்தினை எடுத்துவிட முடியும்..



--கூட்ட முடிவில் அவரிடம் ஆடோக்ரப் வாங்க அலைபாயும் கூட்டம், அவரிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்கிற சாத்யம் உள்ளதா என்று பதறுகிற கூட்டம், நடிக்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று ஆர்ப்பரிக்கிற கூட்டம்..

நடிகர்களையும் இயக்குனர்களையும் இப்படி ஈயென மொய்க்கிற மக்களை பார்க்கையில் எனக்கு எப்போதுமே  ஓர் வார்த்தைப் படுத்த வியலாத அசூயை ஒன்று பிறக்கும்... அந்த கும்பலை விட்டு உடனடியாக வெளியேறி விடத் தோன்றும்..  

2 comments:

  1. நடிகர்களையும் இயக்குனர்களையும் இப்படி ஈயென மொய்க்கிற மக்களை பார்க்கையில் எனக்கு எப்போதுமே ஓர் வார்த்தைப் படுத்த வியலாத அசூயை ஒன்று பிறக்கும்... அந்த கும்பலை விட்டு உடனடியாக வெளியேறி விடத் தோன்றும்.. //

    :-) நல்ல பஞ்ச்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...